districts

img

ஒன்றுபட்ட மக்களிடையே பகைமையை உருவாக்க அனுமதியோம்

இதுதான் இந்த மண்ணின் அரசியல்

கோவையில் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்ற மே17  இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், தமி ழகத்தில் மதவெறியை வளர்த்து தமிழர்களை பிரித்து அரசியல் ஆதாயத் திற்காக பிரிவினை வாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடிய பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் அரசியலை எதிர்த்து ஜனநாயக அமைப்புகள் நடத்தும் மனித சங்கிலியில் பெருந்திரளாக மக்கள்  பங்கெடுத்துள்ளனர். தமிழகத்தில் இந்துத்துவ மதவெறி அரசியலுக்கு இட மில்லை என்று நிரூபித்துள்ளனர்.  மோடி அரசால் கொண்டுவரப்படும் மதவெறி அரசியலை வேரறுப்போம் என்பதை இந்த மனிதசங்கிலி இந்தியாவிற்கு எடுத்துரைக்கிறது. கட்சி, சாதி, மதம் கடந்து இந்துதுவ, மதவெறி அரசியலுக்கு எதிராக கரம் கோர்த்து நிற்கி றோம். இதுதான் இந்த மண்ணின் அரசியல், என்றார்.

தருமபுரி, அக்.11-  அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற மக்களிடம் பகைமையை உருவாக்கி ஆதாயம் தேடும் ஆர்எஸ்எஸ், பாஜக சங் பரிவார் அமைப்புகளை தமிழகத் தில் இருந்து விரட்டுவோம், மக்கள் ஒற் றுமை காப்போம் என்கிற கோரிக்கை முழக்கத்தோடு மதச்சார்பற்ற முற் போக்கு, ஜனநாயக அமைப்புகள், அனைத்து கட்சியினர் பங்கேற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட் டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட னர்.  தருமபுரி நான்கு ரோட்டில் நடை பெற்ற சமூக நல்லிணக்க மனிதசங்கலி இயக்கத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தீர்த்தராமன் தலைமை வகித்தார். இதில், காங்கி ரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் கு.செல்வபெருந்தகை, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஏ.குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர்கள் பொ. மு.நந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் எஸ்.கலைச் செல்வம், இந்திய தேசிய லீக் மாவட்ட தலைவர் சுபேதார், மதிமுக நிர்வாகி நவாப் ஜான், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பிரசாந்த், திராவி டர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், இந்திய யூனி யன் முஸ்லீம் லீக் மாவட்ட துணைத் தலைவர் சீராஜூதின், தமிழ் புலிகள் கட்சி யின் மாவட்ட செயலாளர் முனுசாமி  உட் பட பலர் கலந்து கொண்டு, உரை யாற்றினர். இதேபோன்று பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.  

கோவை

கோவை காந்திபுரத்தில் துவங்கிய மனித சங்கிலியில் ஆயிரக்கணக்கா னோர் கைகோர்த்து நஞ்சப்பா சாலை மற்றும் கிராஸ்கட்சாலை என நீண்ட வரி சையில் நின்றிருந்தனர். மார்க்சிஸ்ட் கட் சியின் கோவை மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன் தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் என்.குணசே கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், தபெதிக பொது செயலாளர் கு.ராம கிருட்டிணன், மே17 இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, காங் கிரஸ் ராஜமணி, மதிமுக மாவட்ட செய லாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், மனித நேய மக்கள் கட்சி இப்ராகிம், திக சிற்ற ரசு, திவிக நேருதாஸ், விடுதலை சிறுத் தைகள் இலக்கியன் உள்ளிட்ட ஆயி ரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு “அமைதியான கோவை அனைவருக் கும் தேவை, அமைதியான தமிழகம் அனைவருக்கும்” என்கிற முழக்கங் களை எழுப்பினர். இதேபோன்று மேட் டுபாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த மனித சங் கிலி போராட்டம் நடைபெற்றது.

சேலம்

தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற நினைக்கும் ஆர்எஸ்எஸ் பயங்கர வாத கும்பல் மற்றும் மதவாத சக்தி களை வேரறுக்க மதச்சார்பற்ற ஜனநா யக சக்திகள் இணைந்து சமூக நல்லி ணக்க மனித சங்கிலி இயக்கம் சேலம் திருவள்ளுவர் சிலையிலிருந்து அம் பேத்கர் சிலை வரை நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், காங்கிரஸ் கட்சி யின் மாநகர மாவட்ட தலைவர் பாஸ் கரன், முஸ்லிம் லீக் செயலாளர் மூசா,  மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், விசிக வடக்கு மாநகர செயலாளர் வசந்த், மாந கர் மாவட்ட பொருளாளர் காஜா மைதீன், மாநில இளைஞரணி செயலா ளர் இமயவரம்பன், திராவிடர் விடுதலை கழக செயலாளர் டேவிட், தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி உதய பிரகாஷ், ஆதித்தமி ழர் பேரவை மாவட்ட செயலாளர் சந்தி ரன், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி முகமது ரபிக், எஸ்டிபிஐ கட்சி செரிப் பாஷா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளா கத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணித்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் தொடங்கியது. இதில், மதிமுகவின் ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர் திருமகன் ஈவெரா, முன்னான் ஒன் றிய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிடர் கழக மாநிலச் செயலாளர் சண் முகம், மதிமுக மாவட்ட செயலாளர் முரு கன், சிபிஎம் மூத்த தலைவர் கே.துரை ராஜ், சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ்.டி. பிரபாகரன், விசிக பொறியாளர் அணி  செயலாளர் சாதிக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆரிப், மனிதநேய மக்கள்  கட்சி சித்திக், தமிழக வாழ்வுரிமை மக் கள் கட்சி சீனிவாசன், நீரோடை அமைப் பின் நிலவன், திராவிடர் விடுதலை கழக ரத்தினசாமி, எஸ்டிபிஐ நிர்வாகி முகமது ருக்மான் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன் நன்றி கூறினார். இதேபோன்று பவானி, அந்தியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித சங்கிலி நடைபெற் றது.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகை காபி ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்தை சிபிஎம் தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் துவக்கி வைத் தார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் எல்.சங்கரலிங்கம், காங்கி ரஸ் மாவட்ட செயலாளர் ரவி, விசிக தலைவர் கட்டாரியா, சிபிஐ மாவட்ட செய லாளர் போஜராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சிபிஎம் மூத்த  தலைவர் கே.ராஜேந்திரன் நன்றி கூறி னார்.

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி சாலையில் மகாத்மா காந்தி சிலை அருகே அணி வகுத்து நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்தில் சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மதிமுக, விசிக, திக உள்ளிட்ட பல்வேறு  அரசியல் கட்சியினர், ஜனநாயக அமைப் பினர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற மனித சங் கிலி இயக்கத்தில், சிபிஎம் மாவட்ட செய லாளர் எஸ்.கந்தசாமி, சிபிஐ மாவட்ட செயலாளர் அன்புமணி, மதிமுக வழக் கறிஞர் பழனிசாமி, விசிக மாவட்ட செய லாளர் பழ.மணிமாறன், காங்கிரஸ் நிர் வாகி சித்திக், மனித நேய மக்கள் கட்சி யின் மாவட்ட தலைவர் அகத்துல்லா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். இதேபோன்று ராசி புரம், திருச்செங்கோடு, குமாரபாளை யம், பரமத்திவேலூர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் மனித சங்கிலி நடை பெற்றது.