districts

img

2 இடத்தில் விபத்து ஏற்படுத்திய ஒரு அரசு பேருந்து

கோவை, டிச.30- ஆனைக்கட்டி வழியாக கேரளா மாநி லம் சென்ற ஒரு அரசு பேருந்து, ஒரே  நாளில் பிரேக் பிடிக்காமல் இருமுறை விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கோவையிலிருந்து ஆனைகட்டி வழி யாக கேரள மாநிலம், மன்னார்காட்டிற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வரு கிறது. இந்த வழி ஒரு மலைப்பகுதி யாகும். கோவையிலிருந்து புறப்படும் பேருந்து ஆனைக்கட்டியில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மன்னார் காட்டிற்கு செல்லும். இந்நிலையில்,  வியாழனன்று மதியம் வெள்ளிங்கிரி என்பவர் இப்பேருந்தை ஓட்டி சென்றுள் ளார். அப்போது பிரேக் பிடிக்காமல் ஆனைக்கட்டி பகுதியிலிருந்த ஒரு தேநீர் விடுதியில் மோதியுள்ளது. இந்த விபத் தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து இப்பேருந்தை ஓட்டி வந்த  ஓட்டுநர் பணி முடிந்து இறங்கிவிட, அப் பேருந்தை குப்புராஜ் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், வியா ழனன்று மாலை 4.30 மணியளவில் அதே போல் கோவையிலிருந்து சென்றபோது அதே பேருந்து மீண்டும் ஆனைகட்டியில் நிறுத்த முற்படும் போது மீண்டும் பிரேக் பிடிக்காமல், அப்பகுதியில் ஐயப்பன்  கோவில் பூஜைக்காக போடப்பட்டிருந்த  பந்தலை இடித்துக்கொண்டு, அருகே  இருந்த உணவகத்திற்குள் புகுந்தது.  இந்த விபத்தில் ஒரு சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், இவ்விபத்தில் அங்கு  நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரும் சேதம டைந்துள்ளது. இதனையடுத்து அங்கு  வந்த மற்றொரு அரசுப்பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள் கிளை மேலாளர் சம்பவ இடத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் சிறைபிடிக்கப்பட்ட பேருந்து விடுவிக்கப் பட்டது. இதனிடையே அரசு பேருந்து கள் முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்குவதாகவும், இதனால் அடிக்கடி பேருந்துகள் பழுதடைந்து விபத்திற்குள் ளாவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ் சாட்டினர்.