மதுரை, ஜூன் 21- மதுரை மாவட்டத்தில் வலைய பட்டி, காயாம்பட்டி (ஒத்தக்கடை பகுதி), மையிட்டான்பட்டி (கள்ளிக்குடி),திருமோகூர்(ஒத்தக்கடை), கூடக்கோவில், கி.ஆலம்பட்டி, வடுகபட்டி (குலமங்கலம்), ராய பாளையம் ஆகிய எட்டு கிராமங்க ளில் பட்டியல் இன மக்கள் மீதும் அவர்களின் வீடுகள், இருசக்கர வாக னங்கள் உள்ளிட்ட உடமைகள் மீதும் கொடூரமான தாக்குதல்கள் நடை பெற்றுள்ளன. இந்த கிராமங்களில் நிலவி வரும் தீண்டாமையை ஏற்க மறுத்து, சட்டப்படியான சமத்துவ உரிமையை கோரியதற்காக பட்டி யலின மக்கள் மீது இத்தகைய கொடூ ரமான தாக்குதல்கள் நிகழ்த்தப் பட்டுள்ளன. காயம்பட்டியில் 26, மையிட்டான் பட்டியில் 11, கூடகோவில் 31, வீரபட்டி யில் 2, ராயபாளையம் என மொத்தம் 71 பட்டியலின மக்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய் துள்ளனர். இந்த கிராமங்களில் பட்டியல் இன மக்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 16 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது. வன்கொடுமையில் ஈடுபட்ட வர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ள காவல்துறை, பாதிக் கப்பட்டவர்கள் மீதும் பொய்யான புகார்களின் அடிப்படையில் வழக்கு கள் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு உரிய நிவா ரணம், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியை கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் நீதிகேட்டு சட்டத் தலையீடு அரங்கம் புத னன்று நடைபெற்றது..
முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநி லப்பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் செ.ஆஞ்சி, மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, மாவட்டப் பொருளாளர் பி.மகா லிங்கம், மாநகர் மாவட்டச் செயலா ளர் எம்.பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் ஜா.நர சிம்மன், ஆதித்தமிழர் கட்சியின் நிறு வனத் தலைவர் கு.ஜக்கையன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.இன்கு லாப், மாநகர் மாவட்டச் செயலாளர் பி.வி.கதிரவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பாலா உள்ளிட்டோர் உரையாற்றி னர். இந்நிகழ்வில், பல்வேறு வித மான தீண்டாமை கொடுமைகளால் பாதிக்கப்பட்ட கிராமத்தினர் வந்தி ருந்து தங்களுக்கு நிகழ்ந்த கொடு மைகளையும், காவல்துறையினர் தங்களை நடத்திய விதம் குறித்தும், தற்போதைய சூழல் குறித்தும் எடுத்துக் கூறினர். பாதிக்கபட்ட பட்டியல் இன மக்க ளுக்கு பக்க பலமாக நிற்போம். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சட்ட உதவி கள் மற்றும் தீருதவி நிவாரணங்களை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுப்போம் என அவர்களிடம் தலை வர்கள் உறுதியளித்தனர். பட்டியல் இன மக்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவதற்காக சட்ட வல்லுநர்கள், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க வழக்கறி ஞர்கள் நிகழ்வில் பங்கேற்று எதிர் கால சட்ட நடவடிக்கைகள் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி னர்.