districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காட்டுயானை தாக்கி விவசாயி பலி

ஈரோடு, செப்.22- சத்தியமங்கலம் அருகே காட்டுயானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மக்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புதுவட வள்ளி அட்டமொக்கை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (63). விவசாயியான இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். ராமசாமி அதேப்பகுதியில் சொந்தமாக ஒன்றை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார். வனப்பகுதியை யொட்டிய பகுதி என்பதால் அடிக்கடி யானை தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து விவ சாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ராம சாமி வியாழனன்று இரவு வழக்கம் போல் தனது விவசாய தோட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார். இந்நிலையில், நள்ளிரவில் ராமசாமி தோட்டத்தில் அயர்ந்து தூங்கி கொண்டி ருந்தபோது, நாய் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தார். அப்போது ஒற்றை யானை வனப்பகு தியை விட்டு வெளியேறி, ராமசாமி தோட்டத்திற்குள் வந்து  பயிர்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது. யானையை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமசாமி தப்பியோட முயன்றார். ஆனால், அதற்குள் யானை அவரை தூக்கி வீசி அவரை காலில் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்திய மங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், யானை தாக்கி உயிரி ழந்த ராமசாமி குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் முதற் கட்டமாக ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.

மின் கட்டண உயர்வை திரும்பப்பெறுக தொழில் துறையினர் வேலைநிறுத்தம்

கோவை, செப்.22- மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக் கோரி செப்.25  ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி தாக்குதல், பொருளாதார மந்த  நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை  தொழில்துறையினர் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால் மேலும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், மின் கட்டண உயர்வை  திரும்பப்பெறக்கோரி, அரசின் கவனத்தை ஈர்க்க செப். 25 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக தொழில்துறையினர் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரி வித்தனர். இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட் டத்தால், சுமார் ரூ.1500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்  வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

அக்.16 ஆம் தேதி முதல் சேலத்திலிருந்து விமான சேவை

சேலம், செப்.22- சேலத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்.16 ஆம் தேதி  முதல் மீண்டும் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட் டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள காமலா புரத்தில் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென் னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை  நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.  விமான சேவை  நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.  நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வந்தார். இந்நிலை யில், உதான்-5 திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்தில் இருந்து சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அக்.16 ஆம் தேதி முதல் அலையன்ஸ் நிறு வனத்தின் சார்பில் பெங்களூர் – சேலம் - கொச்சின் வழித்தடத் தில் விமானம் இயக்கப்பட உள்ளது. இதேபோன்று அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறு வனம் சார்பில் பெங்களூர் – சேலம் - ஹைதராபாத் வழித்தடத் தில் விமான சேவை தொடங்கப்படுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார். 2 ஆண்டு களுக்குப் பிறகு சேலத்தில் இருந்து மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளது வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடிப்படை வசதி கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

தருமபுரி, செப்.22- அடிப்படை வசதிகள் கேட்டு மலைவாழ் மக்கள் பென்னாகரம் பேரூராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூ ராட்சி, போடூர் அருகே உள்ள சருக்கல் பாறை இருளர் இன குடியிருப்பில் 30க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வரு கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் 25க்கும் மேற்பட்ட இருளர் இன மக்களுக்கு சாலை, குடிநீர் கழிப் பிட வசதிகளுடன் குடியிருப்புகள் அமைக் கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில மாதங் களாக இருளர் இன மக்கள் குடியிருப்பில் போதுமான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்பட வில்லை. இதுகுறித்து இருளர் மக்கள் சார் பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த 30க்கும் மேற்பட்ட இருளர் இன மலைவாழ் மக்கள் தங்களது குழந்தைகளுடன் பென்னா கரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு காலிக் குடங்களுடன் வந்து, தரையில் அமர்ந்து முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அதிகாரிகள் அவர் களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த னர். இதைத்தொடர்ந்து போடூர் சருக்கல் பாறை இருளர் இன மலைவாழ் மக்கள் குடி யிருப்பில் குடிநீர் பற்றாக்குறை குறித்து செயல் அலுவலர் கீதா ஆய்வு செய்தார்.

போலி ஸ்மார்ட் கார்டு விற்பனை செய்தவர் கைது

கோவை, செப்.22- அன்னூர், கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த அமுல் ஆண்ட்ரூஸ் (28) என்பவர், வட்டாட்சி யர் அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை  ஒன்றை தொடங்கி தற்போது வரை நடத்தி  வருகிறார். இக்கடையில் அரசு ரேசன் கடை களில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுவதாக அன்னூர் குடியுரிமை பொருள் வட்டாட்சியர் செல்விக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்னூர் போலீ சார் அக்கடையில் வெள்ளியன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசின் ரேசன் அட்டைக்கான ஸ்மார்ட் கார்டுகளில் பயனாளிகள் புகைப்படம் இல்லாமல் இருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து அமுல் ஆன்ட்ரூசை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசா ரித்தனர்.  அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண் ணப்பித்து வராதவர்களுக்கு இவர், போலி  ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பயனாளிகள் புகைப் படத்தை இணைத்து அவர்களுக்கு அனுமதி யின்றி சில மணி நேரங்களில் வழங்கி வந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரி டமிருந்து 650 போலி ஸ்மார்ட் கார்டுகள், பய னாளிகளின் புகைப்படம் பொருத்திய 68 ஸ்மார்ட் கார்டுகள், ஒரு லேப்டாப், 2 செல் போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த னர். தொடர்ந்து அமுல் ஆன்ட்ரூசை அன்னூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சேலம் மத்திய சிறை வார்டன் மாற்றம்
சேலம், செப்.22- சேலம் மத்திய சிறையில் ஏற்பட்ட தகராறு சம்பவத்தை தொடர்ந்து, வார்டன் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மத்திய சிறையில் வார்டன் உள்ளிட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கிளை சிறை அங் காடியில் உணவு வழங்கப்படுகிறது. அதில் சில வார்டன்கள், ஞாயிற்றுக்கிழமை வழக்கமான உணவை தவிர்த்து புரோட்டா, சப்பாத்தி வழங்க கோரிக்கை விடுத்தனர். அதன் படி கடந்த செப்.17 ஆம் தேதி தேதியன்று புரோட்டா வழங் கப்பட்டது. இதையடுத்து சிறை வார்டன் சேகர் கிளை அங் காடியில் புரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஆயுள் தண்டனை கைதி மணிகண்டன் என்பவர், தனக்கும் புரோட்டா வேண்டும் என கேட்டுள்ளார். புரோட்டா தடை செய்யப்பட்ட பொருள் எனக்கூறி தர மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகரா றாக மாறியதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் வினோத், கோவை டிஐஜி சண்முகசுந்தரத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தார். இத னையடுத்து சிறை வார்டன் சேகர் வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

பொய் வழக்கு போட்ட காவல்துறை  ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா

சேலம், செப்.22- பொய் வழக்கு பதிந்த காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம், ஜான்சன்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென ஆட்சியரின் காரின் முன்பு அமர்ந்து அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் பெண்ணிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மனு அளிக்க அழைத்து சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ஜான்சன் பேட்டை  மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அங்கு இரு தரப்பினிடையே வாக்குவாதம் முற்றிய நிலை யில், ஒன்று கூடி கோவில் திருவிழா நடத்தலாம் என நான் தெரி வித்தேன். அதற்கு அங்கிருந்த சிலர் என்னை தகாத வார்த்தை யில் பேசி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து காவல் துறையின ரிடம் புகார் தெரிவித்த போது, கோவில் தரப்பை சேர்ந்தவர் கள் தன் மீது பொய்யான தகவல் தெரிவித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மேலும், அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பால்ராஜ் உள் ளிட்ட காவலர்கள் தன்னை தகாத வார்தையில் பேசி, பயங்கர மாக தாக்கி சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த  நான், பொய் வழக்குப்பதிவு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னைக்குச் சென்று புகார் தெரிவித்து, அவர்கள் மீண்டும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்த னர். கடந்த நான்கு மாதமாக காவல் நிலையத்திற்கு சென்று  முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு என் மீது  போடப்பட்ட பொய் புகார் மீது உரிய விசாரனை நடத்தி, தன்னை தாக்கிய காவல் ஆய்வாளர் மீதும் பொய்யான புகார் கொடுத்த கோவில் தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.