districts

img

கட்டுமான தொழிலாளர் குடியிருப்பு அகற்றம்

ஈரோடு, ஜுலை 30- நசியனூர் பகுதியில் கட்டுமான தொழி லாளர்களின் குடியிருப்பு ஆக்கிரமிப்பு என்ற  பெயரில் அகற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி யின் உறுதிமிக்க போராட்டத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட் டது. ஈரோடு மாவட்டம், நசியனூர்  கிராமத்திற் குட்பட்டது பள்ளிபாளையம். இங்குள்ள பய னற்ற அரசு புறம்போக்கு நிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட போயர் இனத்தைச் சேர்ந்த சுமார் 20 கட்டுமான தொழிலாளர் குடும்பங் கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த மக்கள் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து முறையிட்டு வந் தனர். திடீரென இம்மக்கள் வசித்து வரும்  இடம் இட்டேரி என இருந்ததை 3 உட்பிரிவுக ளாகப் பிரித்து அதில் இரண்டு இட்டேரி என் றும் ஒன்று கோவில் எனவும் வகை மாற்றம் செய்யப்பட்டது. 

இது அப்பகுதியில் உள்ள செல்வாக்கு பெற்ற ஆதிக்கசாதியினருக்கு சாதகமான தாக மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந் தது. இதனை அப்போதே மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்தது. இதன்படி மறு வகை செய்யப் பட்ட இடம் கோவிலுக்கு சொந்தமானது என் றும், அந்த இடத்தில் வசிப்பவர்களை ஆக்கி ரமிப்பாளர் என அறிவித்து அகற்ற வேண்டும் என ஆதிக்க சமூகத்தினரால் கோரிக்கை விடப் பட்டது. ஆட்சேபகரமான இடத்தில் அர சாணை 465 மற்றும் 496 அரசாணையின்படி அரசின் அனுமதி பெற்று அதே இடத்தில் பட்டா கொடுக்கலாம். குடிசை மாற்று வாரி யத்தால் வீடும் கட்டிக் கொடுக்கலாம். அதனை மதிக்காமல் மாவட்ட நிர்வாகம் 63 சென்ட் இடத்தை ஆதிக்க சமூகத்தினர் கோரியபடி கோவிலுக்கு சொந்தமாக்கியுள்ளது.  இதில் அரசு புறம்போக்கில் 10 ஆண்டுக ளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு அனுமதி பெற்று  பட்டா கொடுக்கலாம் என்ற அரசா ணைகள் கண்டு கொள்ளப்படவில்லை. 2000 ஆம் ஆண்டிலிருந்து வீட்டு மனை வழங்கும் திட்டம் இங்கு நடைமுறைப்படுத்தப்பட வில்லை. தொடர் முயற்சியாக குடிசை வீடற்ற தமிழகத்தை உருவாக்கும் தமிழக முதல்வ ரின் திட்டமும் இங்கு பயனளிக்கவில்லை. மாறாக வட்டாட்சியர் 1905 தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டப்படி 6 மற்றும் 7 ஆம் நோட் டீஸ் கொடுக்கப்பட்டது.  இது மிகவும் பிற் படுத்தப்பட்ட போயர் சமூக மக்களின் வாழ் விடங்களை அகற்றுவதற்கானதாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக அரசாணை கள் படி தங்களுக்கு வழங்க வேண்டும் என  அம்மக்கள் போராடி வந்தனர். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடமும் முறையிட்டனர். 

காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு

இந்நிலையில் சனியன்று காலை வட் டாட்சியர் தலைமையிலான வருவாய் துறை யினர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் உள்ளிட்ட அரசு நிர்வாகம் மிகவும் பிற்படுத் தப்பட்ட மக்களின் வசிப்பிடங்களை அகற்றி யது. முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஜி.பழனிசாமி, சி.முருகேசன், தாலுகா செயலாளர் எம்.பாலசுப்பிரமணி, மாவட்டக் குழு உறுப்பினர் பா.லலிதா உள்ளிட்டோர் அம்மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாற்று இடம் கொடுக்காமல் அகற்றக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால் காவல் துறையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற் பட்டது. இதில் சிபிஎம் தலைவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள், குழந்தைகள் உள்ளிட்டு 34 பேரை  காவல் துறையினர் கைது செய்தனர். இத னையடுத்து போலிசாரின் துணையோடு குடி யிருப்புகளை புல்டவுசர் மூலம் இடித்து தரை மட்டமாக்கினர். இதற்கிடையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் முறையிடப்பட்டிருந்தது. இதனை நினை வூட்டி  ஆக்கிரமிப்புகள் அகற்றம், மாற்று  இடம் அளிக்கப்படாதது குறித்தும் அமைச் சரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கன்னிமா கோவில் பகுதியில் மாற்று இடம் வட்டாட்சியர் மூலம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டு அதற் கான ஆவனத்தை காட்டினர். மேலும், கைது  செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுதலை யாகினர். மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதிமிக்க போராட் டத்தின் விளைவாக அப்பாவி ஏழைஎளிய மக்கள் தெருவில் நிறுத்தப்படாமல் மாற்று இடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.