districts

img

கோவை: நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுக்கும் கட்டுமான நிறுவனம்?

கோவை, ஏப்.25- கோவை வெள்ளியங்கிரி மலை யில் இருந்து வரும் நீரை ”நானா நானி”  என்ற முதியோர்கள் வசிக்கும் குடியி ருப்பின் பயன்பாட்டிற்காக விதிமீறல்  செய்து முறைகேடாக எடுத்து செல் வதாகவும், இது குறித்து குடியிருப்பு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத் தின் உண்மை நிலை அறிக்கையை, மாவட்ட ஆட்சியர் தர வேண்டி ஆட்சி யரிடம் புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர். இது குறித்து பேசிய  புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க விவசாயிகள் , 2019ஆம் ஆண்டு நானா நானி என்ற கட்டுமான நிறுவனம் தனது விவசாய நிலத்துக்கு நீர் கொண்டு வர வெள்ளியங்கிரி அடி வாரத்தில் கிணறு வெட்டி அனுமதி வாங்கியதாக தெரிவித்தனர். அப்போதே அந்த அனுமதி தவறு எனக்  கூறி உயர்நீதிமன்றத்தில் தாங்கள் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு  தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து, அவர் கள் போட்டுள்ள பைப் லைன்களை எடுக்க நீதிமன்றம் கூறியது. பின்னர் குடியிருப்பின் உரிமையாளர் போலி கடிதம் ஒன்றை தாசில்தாரிடம் அளித் ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் அந்த கடிதத்தின் உண்மை அறிக்கையை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள் ளோம் என்றனர். மேலும், நொய்யல் ஆற்றங்கரை ஓரமாகவே கிணறு வெட்டி போர்வேல்  போட்டுள்ளார்கள். அதற்கான அனுமதி யெல்லாம் விதிமுறைகளுக்கு முர ணாக பெற்றுள்ளனர் என குற்றம் சாட்டி னர்.  அப்பகுதியில் பைப் லைன் போடுவ தற்கு விவசாயிகளுக்கே அனுமதி வழங் கப்படுவதில்லை என்ற நிலையில், இவர் விவசாயி என்று கூறி அனுமதி பெற்று பைப் லைன் போட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, குடியிருப்பிற்காக நொய்யல் ஆற்றை கடந்து 8 இஞ்ச்  பைப் போட்டுள்ளார்கள். விவசாயிக ளுக்கே 2 இஞ்ச் பைப் தான் அனுமதி  அளிக்கப்படுகிற நிலையில், அவர்கள்  விதிமுறையை மீறி பைப் பதித்துள்ள னர். இவ்வாறு, ஆற்றை ஒட்டி கிணறு  வெட்டி நீர் எடுப்பதால், அச்சுற்றுவட்டா ரத்தில் உள்ள சுமார் 4000 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இந்நிலையில், குடியிருப்பு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் உண்மை நிலை அறிக்கையை கேட்டு  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தோம். மாவட்ட ஆட்சியரும், உண்மை  அறிக்கை தருவதாக கூறியுள்ளார் என  தெரிவித்தனர்.