districts

img

வனவிலங்குகளுக்காக ஒரு கிளினிக் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

 சிதம்பரம் இரவிச்சந்திரன்  வடக்காஞ்சேரி. அகமலா (Akamala). இங்கு கேஷுவாலிட்டி வார்டு, படுக்கை  வசதி. ஒரு மருத்துவர், இரண்டு ஊழியர்கள். வாகன வசதியும் உண்டு. விரைவில் ஒரு அவசர மருத்துவ சிகிச்சை வாகனமும். எதற்காக இவை யெல்லாம் என்கிறீர்களா? இங்கு 24x7 கிளினிக் தயார். இது வனவிலங்கு களுக்காக செயல்படும் கிளினிக். இது 2020 அக்டோபர் 18 முதல் செயல்படத் தொடங்கியது. இங்கு 17 வகையான வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளித்து காட்டிற்குள் கொண்டுவிடப்படுகின்றன. இங்கு வந்தவற்றில் ஐ சி யுவில் சிகிச்சை பெறும் பருந்தும் சிகிச்சை முடிந்து வனத்திற்கு சென்ற மலபார் இருவாயன் பறவையும் உண்டு. மயில், மலைப்பாம்பு, மான், காட்டு வாத்து  போன்றவை இந்த மருத்துவமனைக்கு வந்துசென்ற  நோயாளிகளின் பதிவேட்டில் உள்ளது. கேரள மாநில வனத்துறை பல இடங்களில் உள்ள வனப்பிரதேசங்களில் விலங்கு நல மருத்துவர்களை நியமித்து வனவிலங்குகள் சிகிச்சை பெற கிளினிக்குகளை தொடங்கியிருக்கிறது. அகமலா வனத்துறைக்கு சொந்தமான பாழடைந்த குடியிருப்பு கட்டிடம் புனரமைக்கப்பட்டு கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.  இங்கு 3 இலட்சம் ரூபாய் செலவில் பல உயிரி னங்களுக்காக கூடுகள், படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்லன. ஆரம்பத்தில் திருச்சூர், பாலக்காடு இரண்டு மாவட்டங்களில் வனத்துறை நிலையங்களில் இருந்து மட்டுமே நோயாளிகள் இங்கு வந்தனர். நோயுற்றநிலையில் கண்டுபிடிக்கப்பட்ட, காட்டை விட்டு ஊருக்குள் நுழைந்ததால் காயம்பட்ட  விலங்குகளை வனத்துறையினர் இங்கு கொண்டு வந்தனர். பல விலங்குநல ஆர்வலர்களும் உயிரினங்களை கிளினிக்கிற்குக் கொண்டுவந்து சிகிச்சை பெற்று செல்வது உண்டு. பாம்புகள், மயில்களின் முட்டைகளை கொண்டு  வந்து சேர்ப்பவர்களும் உள்ளனர். வனவிலங்குகள் சட்டப்படி பாதுகாக்கப்படவேண்டிய விலங்கு களின் பட்டியலில் உள்ள பறவைகளை வீடுகளில்  வளர்ப்பது சட்டவிரோதமாக்கப்பட்டது. இதனால்  பிடிக்கப்படும் பறவைகள் இங்கு கொண்டு வரப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. பெரிய அறுவைசிகிச்சை தேவைப் பட்டால் வன உயிரினங்கள் அருகில்  உள்ள விலங்குநல மருத்துவமனைகள் மற்றும் விலங்குநல பல்கலைக்கழக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தக்கநேரத்தில் சிகிச்சை அளிக்கும் இது போன்ற கிளினிக்கு களின் சேவைகள் மேம்படுத்தப்படும் என்று வனச்சரக அலுவலர் சி.வி.ராஜன் கூறுகிறார். காட்டிற்குள் நோய்வாய்ப்பட்டும், காயம்பட்டும் இரை தேட இயலாமல் பரிதவிக்கும் உயிரினங்களின் நலம் இத்த கைய க்ளினிக்குகள் மூலம் உறுதி செய்யப்படு கிறது. கிளினிக்கின் செயல்பாடுகள் குரித்து சாதா ரண மக்களிடையில் விழிப்புணர்வு ஏற்படுத்த இது போன்ற வன உயிரினங்களுக்கான கிளினிக்குகள் உதவியுள்லன. பலதரப்பட்ட பருந்துகள், மயில்கள், கிருஷ்ணப் பருந்து, மான்கள், காட்டு வாத்துகள் போன்ற விலங்குகள் உட்பட மலைப்பாம்பு வரை பல்வேரு உயிரினங்கள்இங்கு நோயாளிகளாக வருகை  தந்துள்ளனர். கேரள அரசின் வனத்துறையிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைப்பது இத்தகைய  கிளினிக்குகள் சிறந்தமுறையில் செயல்பட உதவு கிறது. பிற உயிரையும் தன்னுயிர் போல கருதும் கேரள வனத்துறையினரின் விலங்குகளின் உயிர் காக்கும் இந்த சேவைகள் நாட்டிற்கே நல்ல எடுத்துக்காட்டு.