districts

நிதி நிறுவன இயக்குநரிடம் பணம் பறித்த வழக்கு

கோவை, அக்.27- திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு குற்றவாளிகளை மிரட்டி பணம் பெற்றதாக பதிவு  செய்யப்பட்ட வழக்கில் பிடி வாரண்ட் பிறப்பிக்கபட்ட நிலை யில், முன்னாள் ஐஜி பிரமோத் குமார் வெள்ளியன்று நீதிமன்றத் தில் சரணடைந்தார்.  திருப்பூரை தலைமையிடமாக கொண்டு  செயல்பட்ட பாசி நிதி  நிறுவனத்தினர், முதலீட்டாளர் களுக்கு இரு மடங்கு லாபம் தருவ தாக கூறி கோடிக்கணக்கில் மோசடி யில் ஈடுபட்டனர். இந்த மோசடி வழக்கில் இயக்கு நர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாசி நிதி நிறுவன இயக்குநரான கமலவள்ளி உள்ளிட்ட சிலரை கடத்தி பணம் பறித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. அப்போதைய மேற்கு மண்டல  ஐஜியாக இருந்த பிரமோத்குமார், டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ் பெக்டர் மோகன்ராஜ், இடைதரகர் கள் பிரபாகரன், செந்தில் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கு கோவை  மாவட்ட  இரண்டாவது கூடுதல் சிபிஐ நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.  பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கை  அடுத்தாண்டு ஜூலை மாதத்திற் குள்  விசாரித்து முடிக்க வேண்டும்  என கோவை மாவட்ட நீதிமன்றத் திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐஜி பிர மோத்குமார் மற்றும் ஐந்து பேருக்கு  எதிராக ஏற்கனவே குற்றப்பத்தி ரிக்கை தாக்கல் செய்யப்பட் டுள்ளது. இந்த வழக்கு கடந்த 25ஆம்  தேதியன்று கோவை இரண்டா வது கூடுதல் சிபிஐ நீதிமன்ற நீதிபதி  கோவிந்தராஜன் முன்பு விசார ணைக்கு வந்தபோது,  ஐஜி பிர மோத்குமார் ஆஜராகவில்லை. அவரை தவிர மற்றவர்கள் ஆஜராகி  இருந்தனர். இந்நிலையில்  ஐஜி  பிரமோத்குமாருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத  கைது வாரண்டை சிபிஐ  நீதி மன்ற நீதிபதி கோவிந்தராஜ் பிறப் பித்தார். இந்நிலையில் வெள்ளி யன்று ஐஜி பிரமோத்குமார் வழக்கு விசாரணைக்காக கோவை சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணையானது துவங்கி நடை பெற்று வருகிறது.