திருப்பூர், ஆக.28- உடுமலை குழிப்பட்டி மழைவாழ் மக்கள் குடியிருப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஆரம்ப பள்ளி கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகு தியை சேர்ந்த மாணவ, மாணவிக ளுக்கு கூரைவீட்டில் வகுப்புகள் நடத் தப்படுகிறது. மேலும் இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், மலைவாழ் மக்கள் குடியிருப்பான எங்கள் பகு திக்கு வந்து செல்ல சாலை வசதி இல் லாததால், ஆசிரியர்கள் முறையாக வருவதில்லை. வாரத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே வந்து செல்கின்ற னர். இதனால் எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் பெய ரைக்கூட எழுதத் தெரிவதில்லை. எந்த அடிப்படையும் தெரியாமலே ஆரம்ப பள்ளியை முடிக்கின்றனர். தேர்ச்சி சான்றிதழ் மட்டும் வழங்கப்ப டுகிறது. உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பாதி யில் பள்ளியிலிருந்து நின்று விடுகின் றனர். எனவே 1ஆம் வகுப்பு முதல் வால்பாறை, திருமூர்த்தி மலை, உடு மலை ஆகிய பகுதிகளில் குழந்தை களை சேர்த்து விடுகின்றோம். வால் பாறை தங்கும் விடுதியில் சேர்க்கப் படும் எங்கள் குழந்தைகளை பார்க்கச் சென்று வர 5 ஆயிரம் ரூபாய் வண்டி வாடகை ஆகிறது. 6 வயது குழந்தைகள் எப்படி பெற்றோர் களைப் பார்க்காமல் இருக்கும். மாதத்திற்கு ஒரு முறை கூட சென்று வர முடிவதில்லை. இதனால் எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாடம் நடத்தப்ப டுகிறது. எங்கள் பகுதியில் 10ஆம் வகுப்பை தாண்டிய ஒருவர்கூட இல்லை. பெரும்பாலும் 9ஆம் வகுப் புடன் பள்ளிப் படிப்பை முடித்துக் கொள்கின்றனர். பாழடைந்து காணப் படும் அரசு ஆரம்பப்பள்ளியை சீர மைத்து, ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்துவதை உறுதி செய்தால் மட் டுமே குழந்தைகளின் கல்வி காப்பாற் றப்படும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து கூரைவீட்டில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் கூறு கையில், குழிப்பட்டி கிராமத்திற்கு வந்து செல்ல சாலை வசதி இல்லாத தால் தினமும் வந்து செல்ல இய லாது. மலை வழியில் சுமார் 8 கி.மீ நடத் துதான் வர வேண்டும். வாகனத்தில் வர வேண்டும் என்றால் 120 கி.மீ சுற்றி வர வேண்டும். எப்படி வந்து செல்ல வேண்டும் என்றாலும் 6 மணி நேரம் ஆகிவிடும். எனவே இங்கேயே தங்கி தான் குழந்தைகளுக்கு பாடம் எடுக்க வேண்டும். இப்பகுதியில் முறை யான தங்கும் இடம், கழிப்பிடம் என்று எந்த அடிப்படை வசதியும் இல்லை. போக்குவரத்து படியும் கொடுக்கப்ப டுவதில்லை. எங்களால் முடிந்த எங் கள் சொந்த பணத்தில் வந்துதான் குழந்தைகளுக்கு பாடம் நடத்திச் செல்கிறோம் என்று தெரிவித்தார்.