districts

img

சுற்றுலா பயணிகளை கவரும் பறவைகள் பூங்கா

உதகை, மே 24- உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிதாக தொடங்கப் பட்டுள்ள கிளிகளின் பூங்காவினை ஏராள மான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.  மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண் ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துக் வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டில் 15 லட்சம் பேர் வந்து சென்ற நிலை யில், தற்போது அது 30 லட்சமாக அதிகரித் துள்ளது. ஆனால் அன்று முதல் இன்று வரை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற முக்கிய  சுற்றுலா தலங்களை மட்டுமே இருந்து வந் தது. சுற்றுலா பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனைய டுத்து, கூட்ட நெரிசலை குறைக்க மேலும் பல் வேறு சுற்றுலா தலங்களை உருவாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.  

இந்நிலையில், உதகை அருகே உள்ள பர்ன்ஹில் பகுதியில் தனியார் நிறுவனம் சார் பாக பறவைகள் பூங்கா ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஜூரைல் பறவைகள் பூங்காவை போல அமைக்கபட் டுள்ள இந்த பூங்காவில் 8 வகைகளில் நூற்றுக் கணக்கான கிளிகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. தென் அமெரிக்கா மற்றும் அமேசான் மற் றும் ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கபட்ட சேன் கென்யூர் வகை கிளி உள்பட பல்வேறு வண்ண கிளி களும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேண் டஸ் வாத்து, தையோகா வாத்து, பிஞ்சஸ் குருவிகள், கலிபோர்னியா காடைகள், பறக் கும் அணில் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வைக்கபட்டுள்ளன. மனிதர்களுடன் சகஜ மாக பழுகும் இந்த கிளிகள் பூங்காவிற்குள் செல்லும் சுற்றுலா பயணிகளின் தலை, தோல் கள், கைகளின் மீது அமர்வது சுற்றுலா செல் பவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இந்த பறவைகளுக்கு ஏற்ற தட்ப வெப்ப நிலையை பராமரிக்க பூங்காவிற்குள் செயற்கை நீரூற்று, மரங்கள், புற்கள் போன்றவை களும் வைக்கபட்டுள்ளன. இதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச் சர் கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் ஆகியோர் திறந்து வைத்து பார்வை யிட்டனர்.   உதகைக்கு வரும் சுற்றுலா பயணி களுகள் பூங்காவிற்கு சென்று கிளிகளுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்ற னர். இந்த பூங்காவை காண வரும் சுற்றுலா  பயணிகளுக்கு தலா ரூ.100 கட்டணமாக வசூலிக்கவும் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள் ளது.