நூறு சதவிகிதம் வாக்களிக்க வலியு றுத்தி, பென்னாகரத்தில் வாக்காளர்க ளுக்கு வெற்றிலை, பாக்குடன் துண்டுபிர சுரம் வழங்கி தேர்தல் நடத்தும் அலுவலர் கள் அழைப்பு விடுத்துள்ளனர். நூறு சதவிகித வாக்குப்பதிவைச் செலுத்தும் வகையில், தருமபுரி மாவட்டத் தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக் காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் பென்னாகரம் சட்டப்பே ரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமப்பகுதி களில் வாக்காளர்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு விடுத்தனர். பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் பால் பிரின்சிலி ராஜ்குமார் தலைமையில் தேர்தல் கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பூங் கோதை (சிப்காட்), தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சுகுமார், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகா லட்சுமி, காவல் துறை, வருவாய்த்துறை அடங்கிய குழுவினர் பொதுமக்கள், கல் லூரி மாணவ, மாணவிகள், அந்தப் பகுதியில் உள்ள கடை வியாபாரிகளிடம் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி யும் வெற்றிலை, பாக்கு அளித்தும் வாக்க ளிக்க வருமாறு அழைப்பு விடுத்தனர். இதில் வருவாய் அலுவலர் சுஜாதா, பென் னாகரம் காவல் ஆய்வாளர்கள் உமாசங் கர், ஜாகிா் உசேன் (போக்குவரத்து), கிராம நிர்வாக அலுவலர் கோபால், வரு வாய்த்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.