ஈரோடு, மார்ச் 20- ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிக ளில் மழை பெய்த நிலையில், அந்தியூர் பகுதி யில் வீசிய சூறைக்காற்றுக்கு வாழைமரங் கள் சாய்ந்தன. தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் சனியன்று இரவு பலத்த சூறா வளிக்காற்று வீசியது. அதன்பின் சுமார் அரை மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. சூறா வளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியா மல் புதுக்காடு, கிழங்கு குழி, வட்டக்காடு காந்திநகர், விளாங்குட்டை ஆகிய பகுதி களில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்தி ருந்த மொந்தன், ரொபஸ்டா ரகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடி யோடு சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. மேலும் 10க்கும் மேற்பட்ட தென்னை மரங் கள் மற்றும் தோட்டங்களில் மூங்கில் கம்புகள் மீது படரவிடப்பட்டிருந்த 5 ஏக்கர் பரப்பளவி லான வெற்றிலை கொடிகளும் கீழே விழுந்து சேதமடைந்தன. வட்டக்காடுவில் உள்ள ஒரு தோட்டத்தில் சூறாவளிக்காற்றில் அரை ஏக் கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்தது. மேலும் தென்னை மரம் முறிந்து விழுந்தது. புதுக்காடுவில் மின்கம்பம் சாய்ந்து விழுந்த தால் அந்த பகுதியில் சனியன்று இரவு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் அந்த பகுதி இருளில் மூழ்கி யது. இதேபோல் நம்பியூர் சுற்றுவட்டார பகுதி களான கரட்டுப்பாளையம், குருமந்தூர், காரப் பாடி, ஒட்டர் கரட்டுபாளையம் உள்ளிட்ட பகு திகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதனால் தோட்டங்களில் சாகுபடி செய்யப் பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங் கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்துள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.