districts

img

சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை பலி: மக்கள் மறியல்

உதகை, ஜன.6- பந்தலூர் அருகே சிறுத்தை தாக் கியதில் படுகாயமடைந்த 3 வயது  குழந்தை உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. இதனிடையே சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள ஏலமன்னா கிராமத் தில் கடந்த சில நாட்களாக சிறுத்தை  ஒன்று நடமாடி வருகிறது. கால்நடை களை வேட்டையாடி வந்த  சிறுத்தை, தற்போது மனிதர்களை யும் தாக்கி வருகிறது. ஏற்கனவே, சிறுத்தை தாக்கி பழங்குடியின பெண் சரிதா என்பவர் உயிரிழந் துள்ளார். மனிதர்களை தாக்கி  அச்சுறுத்தி வரும் சிறுத்தையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந் துள்ளனர். மேலும், சிறுத்தையை பிடிக்க ஆறு கூண்டுகளும், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க இரண்டு வனக்கால்நடை மருத்துவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள கிராமப் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நி லையில், மேங்கோ ரேஞ்ச் பகுதி யில் அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் சென்ற வடமாநிலத் தைச் சேர்ந்த 3 வயது குழந்தையை  திடீரென தேயிலைத் தோட்டத்தில்  மறைந்திருந்த சிறுத்தை, தாயின்  கண் முன்னே தாக்கி இழுத்துச்  சென்றது. இதனால் அதிர்ச்சிய டைந்த தாயின் அலறல் சத்தத்தை கேட்ட தொழிலாளர்கள், தேயிலை  தோட்டம் முழுவதும் குழந்தையை  தேடினர். இதன்பின் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டு செல்லப்பட் டார் அங்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டும் சிறுமி பரிதாபமாக உயிரி ழந்தார். தொடர்ந்து சிறுத்தையின் தாக்குதல் காரணமாக ஏற்கனவே  ஒரு பழங்குடியின பெண் உயிரி ழந்த நிலையில், தற்போது 3 வயது  குழந்தை உயிரிழந்த சம்பவம் அப் பகுதி பொதுமக்களிடையே பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என  வலியுறுத்தியும், உயிரிழந்தவர் களின் குடும்பத்திற்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும் என வலியு றுத்தி வடமாநில தொழிலாளர்க ளுடன், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத னால் அப்பகுதியில் பெரும் பரப ரப்பு ஏற்பட்டது.