கோவை, செப்.1- கோவை காவல் ஆணையரின் உத்த வின் பேரில், தணிக்கை மேற்கொண்ட போலீ சார் தலைக்கவசம் அணி யாமல் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த 965 பெற்றோர்களுக்கு அபராதம் விதித்தனர். கோவை மாநகரில் தனியார் வாகனங்களில் பொருத் தப்பட்டுள்ள அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப் பான்கள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை குறித்து சிறப்பு தணிக்கை மேற்கொள்ள காவல் ஆணை யர் பாலகிருஷ்ணன் உத்தவிட்டார். அதன்பேரில், கடந்த ஆக.22 முதல் 29 ஆம் தேதி வரை தணிக்கை மேற்கொள் ளப்பட்டது. அதில், தனியார் வாகனங்களில் பொருத் தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய 41 ஒலிப் பான்கள் அகற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், உரிய அனுமதியின்றியும், பாதசாரிகளுக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டிருந்த 9 விளம்பர பதாகைகள் மற்றும் 9 கடைகள் அகற்றப்பட்டது. கேட் பாரன்றி இருந்த 85 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 107 வாக னங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், அனைத்து வாகனங்களும் அப் புறப்படுத்தப்பட்டன. போக்குவரத்துக்கும், பொதுமக்க ளுக்கும் இடையூறாக இருந்த 2 தள்ளுவண்டிகளும் அகற்றப்பட்டன. மேலும், கடந்த 3 நாட்களாக இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் குழந்தை களை பள்ளிக்கு அழைத்து வந்த 965 பெற்றோர்க ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.