திருப்பூர், ஏப்.28- சிபிஎம் மற்றும் சிஐடியு சார் பில் உடுமலை, குரல்குட்டை யில் மே தினத்தின் முக்கியத்து வம் குறித்தும், 8 மணி நேர வேலை கோரிக்கை குறித் தும், 100 நாள் வேலை தொழி லாளர்கள் மத்தியில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் கிளைச்செயலா ளர் எம்.தட்சிணா மூர்த்தி தலை மையில், சிஐடியு கமிட்டி உறுப் பினர் கே.முத்துலட்சுமி முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் உடுமலை ஒன் றியச் செயலாளர் கி.கனகராஜ் மேதினம் குறித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு ஏற் பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் பேசி னார். மே தினத்தன்று சிஐடியு சார்பில் நடை பெறும் மே தின பேரணி பொதுக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்யப் பட்டது. நிறைவாக, மாரியம்மாள் நன்றி கூறி னார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங் கேற்றனர்.