கோவை, அக்.11- கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற 8 மணி நேர ஹேக்கத்தான் போட்டியில் ஏராளமான மாண வர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம், அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2 ஆவது ஆண்டு இயந்திரவியல் மாணவர்களுக்கு 8 மணி நேர தொடர் ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. மொத்தம் 71 மாணவ, மாணவிகள் 17 குழுக்களாக கலந்துகொண்டு, தங்களது ஆக்கப்பூர்வமான யோசனைகளை சமுதாயத் திற்கு பயன் தரும் பல படைப்புகளாக உருவாக்கினர். இதில் மாணவர்கள் இயந்திரவியல் மற்றும் மின்னணுவியல் உபகர ணங்களை கொண்டு, ஐஓடி (IOT) மற்றும் ஆர்டுய்னோ சார்ந்த பல்வேறு படைப்புகளை உருவாக்கினர். மாணவர்களின் அனைத்து படைப்புகளும் கோவையிலுள்ள தானியங்கி மற்றும் எந்திரவியல் தொழில்நுட்ப மையமான கவின் இங்கின் தொழில்நுட்ப திட்ட மேலாளர் எஸ்.இராமநாதன் மதிப்பி டப்பட்டு, அதன் அடிப்படையில் 3 சிறந்த படைப்புகளுக்கு பரிசுத்தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டன. இப்போட்டியானது மாணவர்களிடையே கூட்டுமுயற்சி, தொலை நோக்கு சிந்தனை மற்றும் ஹேக்கத்தான் போன்ற தொழில் நுட்ப போட்டிகளை எதிர்கொள்ளும் திறமையை வளர்க்கும் வகையில் அமைந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை கல்லூரியின் தலைமை நிர்வாகி ஏ.எம்.நட ராஜன், முதல்வர் மா.ராமசாமி ஆகியோர் வெகுவாக பாராட்டி ஊக்குவித்தனர்.