districts

img

அக்.7 ஆம் தேதி வரையாடுகள் தினம் கொண்டாட்டம்

உதகை, அக்.4- தமிழ்நாட்டில் முதன்முறையாக அக்.7 ஆம் தேதியன்று வரையாடுகள் தினம் கொண்டாடப்பட உள்ளதாக முது மலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். வனவிலங்குகள் வார தினத்தை முன்னிட்டு, உதகை அரசு கலை கல்லூரி யில் “யானைகளை கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் புகைப்படக் கண் காட்சி ஒரு வாரம் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார். வனப்பகுதியி லுள்ள யானை, சிறுத்தை, புலி, காட்டெ ருமை, மான்கள், கழுகு, பிணந்தின்னிக் கழுகு உள்ளிட்ட அரிய வகை பறவை களும், ஊர்வனமும் புகைப்பட கண்காட்சி யில் இடம்பெற்றிருந்தன. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்க டேஷ், ஒவ்வொரு ஆண்டும் வனவிலங்கு வார விழாவின்போது “யானைகளை காப்போம்” என்ற தலைப்பில் விழிப் புணர்வு பேரணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் பொது மக்களும் அறிந்து கொள்ளும் வகை யில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வரு கின்றன. இதன் மூலம் வனவிலங்கு களின் வாழ்வியல் முறைகளை அனை வரும் அறிந்து கொள்ள முடியும் என் பதை உணர்த்தும் விதமாக இந்த வன விலங்கு வார விழா நடைபெறுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் மாநில விலங்காக உள்ள வரையாடுகள் நீல கிரியிலுள்ள முக்கூர்த்தி தேசிய பூங்கா பகுதிகளில் அதிகமாக உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு முதன்முறையாக தமிழ்நாட்டில் அக்.7 ஆம் தேதியன்று வரையாடுகள் தினம் கொண்டாடப்பட உள்ளது, என்றார்.