தருமபுரி, ஜூலை 25- பெருங்காடு இருளர் மக்கள் 70 ஆண்டுகாலம் அனுபவம் செய்துவரும் நிலத்திற்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி. சாந்தியிடம் திங்களன்று மனு அளித்த னர். இந்த மனுவில் கூறப்பட்டிருப்பதா வது, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பெருங்காடு கிராமத்தில் இரு ளர் இன மக்கள் வசிக்கின்றனர். சுமார் 1950 ஆம் ஆண்டு முதல் இக்கிராமத் தைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட குடும் பங்கள்அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். மேலும், அரசு புறம்போக்கு நிலத்தி லேயே சுமார் 70 ஆண்டுகாலம் விவசாய சாகுபடி செய்து அதில் வரும் சிறு வரு வாயில் பிழைத்து வருகின்றனர். மேலும், இக்கிராமத்தில் இருந்து மாணவர்கள் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று சாஸ்திரமுட்லு கிராமத் தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்ற னர். எனவே, இம்மாணவர்களின் நலன் கருதி பெருங்காடு கிராமத்தில் இருந்து சாஸ்திரமுட்லு வரை அரசு பேருந்து இயங்க வேண்டும். இக்கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. புதியதாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். நியாய விலை கடைக்கு 3 கிமீ செல்ல வேண்டி நிலை உள்ளது. 120 குடும்பங்கள் உள்ள எங்கள் கிராமத் திற்கு நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்த னர்.