100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விருத்தாச்சலம் பிடிஓ அலுவலகம் முன்பு துணைத் தலைவர் வீராசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கலைச்செல்வன், விவசாய சங்கத்தின் வட்டப் பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.