districts

img

தொழிற்துறையினரின் இந்த தொடர் போராட்டம் ஏன்? - ஜெயபால்

மனு கொடுப்பதில் துவங்கி, உண்ணா விரதம், தர்ணா என 7 கட்ட போராட்டங்களை நடத்தி 8 ஆவது கட்டமாக மாநிலம் முழுவதும் ஒரு மனி தனாக நின்று மனித சங்கிலி போராட் டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக் கின்றனர் தொழிற்துறையினர். எங்க ளின் தொடர் போராட்டங்கள் அரசை எதிர்த்து அல்ல, அரசின் கவனத்தை ஈர்க்கவே என்கிற உறுதிப்பாட்டோடு இந்த போராட்டத்தை நடத்தி வந்தா லும், அரசு இவர்களின் கோரிக்கை நியாயத்தை உணர்ந்து தீர்வுக்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என்பது தொழிற்துறையி னரை வேதனையடையச் செய்துள் ளது. தொழிற்துறையினரின் இந்த  தொடர் போராட்டம் ஏன் என்பது  குறித்து, நமது தீக்கதிர் நாளிதழுக் காக, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர்களில் ஒருவரும், மறு சூழற்சி ஜவுளி கூட்டமைப்பின் மாநில தலைவருமான எம்.ஜெயபால் நம்மி டம் பகிர்கையில், தமிழக வரலாற்றில்  இதுவரை இல்லாத வகையில் காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம்  தொழிற்சாலையை இயக்கினால் கூடு தலாக 15% மின்கட்டணம் செலுத்த  வேண்டும் என சிறு குறு நடுத்தர தொழி துறை மீது அரசு புதிதாக திணித்துள் ளது. இந்த மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே கடும் தொழில் நெருக்கடியில் இருக்கும் எங் களுக்கு இந்த சுமையை ஒருபோதும் ஏற்கமுடியாது என்கிற நிதர்சனமான உண்மையை தொழிற்துறையினர் மொத்தமாக உணர்ந்து கொண்டதின் அடிப்படையிலேயே இன்று வீதியில் இறங்கி போராடுகிறோம். 

ன்பும், அமல்படுத்திய பின்பும் தமிழ கத்தில் உள்ள பெரும்பாலான சங்கங் கள் கடந்த ஜூன் 2022 முதல் அவர்  அவர்களுக்கு தெரிந்த வகையில் தனி தனியாகவே சிறு குழுக்களாகவோ முயற்சி செய்தோம். பல்வேறு வாக் குறுதிகள் கொடுக்கப்பட்டது. ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் எந்த பல னும் கிடைக்காமல் நம்பிக்கை இழந் தோம். தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில், 38 மாவட்டங்களில் போராடும் சங்கங் களை ஒருங் கிணைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டது. காரணம்பேட்டை யில் 6000 தொழில் முனைவோர் களுடன் முதலமைச்சரின் கவனத்தை  ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதம் மேற்கொண்டோம். அதைத்தொ டர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழக முழுவதிலும் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டமும், அன் றைய தினமே மதுரையில் கோரிக் கையை வலியுறுத்தி உண்ணாவிர தத்தை மேற்கொண்டதன் பலனாக அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட் டது. எங்களது நியாயமான கோரிக்கை களை அமைச்சர்கள் இடத்தில் தெரி வித்தோம்.  இதன் தொடர்ச்சியாக அதிகாரி கள் மட்டத்திலான இரண்டாம் கட்ட  பேச்சுவார்த்தை நடந்தது.TOD மீட்டர் பொருத்தும் வரையில் பீக்ஹவர் கட்ட ணம் தற்காலிகமாக ரத்து செய்வதாக வும், சோலாருக்கு நெட்வொர்க் கட்ட ணத்தை குறைக்க முன் வருவதாக வும், 12 KW கீழ் உள்ளவர்களுக்கு 3A மாற்றப்படும் என அறிவிக்கப்பட் டது. மேலும் சீசன் முறையில் ஆர்டர் களை கொண்ட தொழில் துறையின ருக்கு வருடம் 4 முறை எந்த கட்டண மும் இல்லாமல் வாங்கிய டிமாண்ட் லோடில் குறைத்து கொள்ளவும் தேவைப்படும் போது திரும்ப பெற்று கொள்ளவும் சலுகை வழங்கப்பட்டது. ஒரு வருடத்துக்கு மேலாக தனித்தனி யாக போராடி நம்பிக்கை இழந்து,  கூட்டமைப்பு துவங்கி 33 நாட்களி லேயே பலன் கிடைக்க ஆரம்பித்தது.

50சதவிகிதம் உங்கள் கோரிக்கை கள் நிறைவேற்றப்பட்டு விட்டதே பின் ஏன் தொடர்ந்து போராடுகின்றீர்கள் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. 400 மேற்பட்ட தொழில் துறை தமிழ கத்தில் உள்ளது. 6.35 பைசா யூனிட்  இருந்த கட்டணத்தை 7.50 பைசா என  1.15 பைசா யூனிட் ஒன்றுக்கு உயர்த்தப் பட்டு உள்ளதை தமிழகத்தில் உள்ள தொழிற்துறையினர் அனைவரும் இன்றைய தொழில் உள்ள நெருக்கடி யான சூழ்நிலையிலும் கூட ஏற்று  கொண்டோம். மின் கட்டணத்துடன் மின் வாரியம் 30 மேற்பட்ட கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி உள்ளது. இதில் தமிழக தொழில் அமைப்புகள் 5 கோரிக்கைகளை மட்டும் முன்னெ டுத்து முதலமைச்சரிடத்தில் வலியு றுத்தி வருகின்றோம். இந்த 5 பிரதான கோரிக்கைகள் கூட முழுமையாக கிடைக்காததினால் தான் நாங்கள் தொடர்ந்து போராடும் நிலைக்கு தள் ளப்பட்டுள்ளோம்.  இதில், நாங்கள் மாதம் எத்தனை யூனிட் பயன்படுத்துகின்றோம் என் பதை மதிப்பிட்டு ஒன்னரை மடங்கு முன்பணம் டெபாசிட்டாக பெற்று கொள்கின்றனர். கூடுதலாக எத்தனை KW மின் இணைப்பு பெற்று உள் ளோமோ அந்த அடிப்படையில் KW  ஒன்றுக்கு 35 ரூபாய் மாத மாதம் வசூல் செய்து வந்தனர். உதாரணத்துக்கு 112 KW வாங்கி இருந்தால் 112×35= 3920 தொழிற்சாலை இயக்கினாலும் இயக்காவிட்டாலும் செலுத்த வேண் டும். (மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 7.50 தனி) மின்கட்டணம் உயர்த்திய போது டிமாண்ட் சார்ஜ் 35 இருந்து 430 சதவீதம் 153 ரூபாயாக உயர்த்தினர். இதன்படி 112×153= 17136 ரூபாய் தற் போது (13126) உயர்ந்து உள்ளது. கேட்ட யூனிட் கட்டணத்தையும் கொடுத்து விட் டோம். வங்கியில் 10% வட்டிக்கு வாங்கி  மின் வாரியத்துக்கு 5.70. சத வட்டிக்கு டெபாசிட்டும் கொடுத்துவிட்டு கூடுத லாக சுமத்தப்பட்ட 430% டிமாண்ட் சார்ஜ் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்கிறோம். 

பீக் ஹவர் சார்ஜ்

தமிழக வரலாற்றில் இதுவரை இல் லாத வகையில் காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் தொழிற்சா லையை இயக்கினால் கூடுதலாக 15%  மின்கட்டணம் செலுத்த வேண்டும் என சிறு குறு நடுத்தர தொழில்துறை மீது  புதிதாக திணிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய கோரினோம். தற்போது TOD மீட்டர் பொறுத்தும் வரையில்  தற்காலிக ரத்து என அறிவித்து உள்ள னர். எங்கள் கோரிக்கை; இயற்கைக்கு  முரணான கட்டணத்தை நிரந்திரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியு றுத்துகின்றோம். எங்கள் கூரையின் மீது வங்கி கடன் பெற்று தொழிற்சா லைக்கு தேவையான மின்சாரத்தை சோலார் மின்தகடுகள் அமைத்து உற் பத்தி செய்கின்றோம். இதை நாங்கள்  யாருக்கும் விற்பனை செய்யவில்லை.  மின்வாரியம் அரசுக்கு கொடுத்து வரும் நஷ்ட சுமையையே குறைத்து உள் ளோம். மற்ற மாநிலங்களில் 50% வரை  மானியம் அளித்து ஊக்குவிக்கின்ற னர். ஆனால், தமிழக மின்சார வாரி யமோ கூரையின் மீது சோலார் பேனல் மூலம் பெறும் மின்சாரத்துக்கு நெட் வொர்க் சார்ஜ் என யூனிட் ஒன்றுக்கு 1.53 பைசா கட்டணத்தை வசூல் செய்து வருவதை ரத்து செய்ய முதலமைச்சர் அவர்கள் இடத்தில் வலியுறுத்தி னோம். இதில் 50% மட்டும் குறைப்ப தாக தெரிவித்தது அதிர்ச்சியை அளித் ததினால் முழு கட்டணத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துகின்றோம். 

உங்களால் அரசுக்கு என்ன லாபம் கிடைக்கும்?

தமிழகத்தில் 8 கோடி மக்கள் வசிக் கின்றனர். இதில் அரசாங்க. ஊழியர்க ளாக 13 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு நேரடியாக கிடைக்கின்து.  அதேசமயம் 3.5 லட்சம் தாழ்வழுத்த மின் சார இணைப்பில் 10 லட்சம் தொழில் முனைவோர்களால் 1 கோடி மக்க ளுக்கு நேரடியாக வேலை வாய்ப்பு வழங்கி வருகின்றோம். மாதம் ஒன் றுக்கு தோராயமாக தமிழக அரசுக்கு SGST வரியாக 4000 கோடி ரூபாய் CGST 4000 கோடி ரூபாய் செலுத்தி வருவதுடன் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வார சம்ப ளம், மாத சம்பளம் வழங்குவதன் மூலம் மாநில முழுவதிலும் உள்ள மளிகை, காய்கறி, துணி, நகை, ஹோட் டல், பேக்கரி, அழகு நிலையங்கள் என அனைத்து துறையினருக்கும் தொழி லாளர்கள் மூலம் பணம் பரவலாக்கப் பட்டு வளர்ச்சி பாதையில் செல்ல முக் கிய காரணமாக உள்ளோம். மின்கட்டணம் 6.35 இருந்து 7.50 ஆக உயர்த்தியதை ரத்து செய்ய நாங் கள் போராடவில்லை. மாறாக 0-50KW =215%, 50-112KW =430%, Fixed charge மூலம் வருடம் 1872 கோடி ரூபாய் என மாதம் 164 கோடி  ரூபாய் கூடுதல் கட்டணத்தை ரத்து  செய்ய கோரியும், Peak hours கட்ட ணம் வருடத்துக்கு ரூ.182 கோடி என  மாதம் ரூ.15 கோடி ரத்து செய்ய கோரி யும், சோலார் மூலம் பெறும் நெட்வொர்க்  சார்ஜ் வருடம் ரூ.24 கோடி மாதம் ரூ.2 கோடி ரூபாய் என கட்டாய வசூலை ரத்து செய்ய கோருகின்றோம். வரு டம் 48000 கோடி ரூபாய் வரி அளித்து  ஒரு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வரும் MSME துறையினரின் நியாயமான கோரிக் கையை ஏற்று முதலமைச்சர் தாயுள் ளத்துடன் மறுபரிசீலனை செய்ய வலி யுறுத்தி இந்த போராட்டங்களை முன் னெடுத்து வருகிறோம், என்றார். (ந.நி)