districts

img

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 7 முனை பிரச்சார இயக்கம்

நாமக்கல், ஜூன் 24- புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும் பப் பெற வேண்டும். அரசு ஊழியர்களுக்கு  அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.  தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள  நான்கு லட்சம் பணியிடங்களை, இளைஞர் களை கொண்டு நிரப்ப வேண்டும். அரசு  துறையில் அவுட்சோர்சிங் முறை மட்டும்  ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் 7  முனைப் பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கம் ஈடுபட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு இந்த பிரச்சார இயக்கம் நடைபெற் றது.  மாநிலத் துணைத் தலைவர் பழனியம் மாள், சிஎஸ் கிறிஸ்டோபர். மாவட்ட அரசு  ஊழியர் செயலாளர் முருகேசன் மற்றும் அனைத்து துறை ஊழியர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஈரோடு

நீலகிரி மாவட்டம், கூடலூரில் தொடங் கிய பிரச்சார குழு வியாழனன்று ஈரோட்டில் அரசு ஊழியர் சந்திப்பு இயக்கத்தை நடத்தி யது. மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில்  நடைபெற்ற பிரச் சார இயக்கத்தில் மாவட்ட தலைவர் ராக்கி முத்து தலைமை வகித்தார். இதில், மாவட்ட  செயலாளர் விஜயமனோகரன், மாநில துணை தலைவர் சி.எஸ்.கிறிஸ்டோபர் மற் றும் மாவட்ட நிர்வாகிகள், ஈரோடு வட்டக் கிளை நிர்வாகிகள் மற்றும் திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கோபி மற்றும் பவானியில் ஊழி யர் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. முன் னதாக புதனன்று மாலை பெருந்துறையில் பயணக்குழுவிற்கு சிறப்பான வரவேற்பும், பிரச்சாரமும் நடைபெற்றது.