districts

7 ஏக்கர் மரவள்ளி கிழங்கு பயிர்கள் கருகி சேதம்

நாமக்கல், ஜூலை 30- ராசிபுரம் அருகே 7 ஏக்கர் மரவள்ளி கிழங்கு பயிர்கள் கருகி சேதமடைந்த நிலை யில், உடனடியாக நிவாரணம் வழங்க வேண் டும் என பாதிக்கப்பட்ட விவசாயி வலியு றுத்தி உள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கார்கூடல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வர் இளையபெருமாள் (60). விவசாயியான இவர் 10 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளார். சில மாதங்களில் அறு வடைக்கு தயாராக இருந்த மரவள்ளி கிழங்கு பயிரில் திடீரென மாவுபூச்சி மற்றும் செம்பேன்  தாக்குதல் ஏற்பட்டது. இதனையடுத்து இதனை கட்டுப்படுத்த ஆத்தூரில் உள்ள  அக்ரோ சர்வீஸ் (விவசாய பொருட்கள் விற் பனை நிலையத்தை) நாடியுள்ளர். அப்போது அவர்கள் அறிவுறுத்தலின்படி, கொடுத்த மருந்தை விவசாயி முதற்கட்டமாக 7 ஏக்கர்  பரப்பில் உள்ள மரவள்ளி கிழங்கு பயிர்க ளுக்கு தெளித்துள்ளார். 4 நாட்கள் கழித்து பார்தபோது மருந்து தெளித்த 7 ஏக்கர் மர வள்ளி கிழங்கு பயிர்கள் கருகியதை கண்டு அதிர்ச்சியடைந்த இளையபெருமாள், சம்பந் தபட்ட நிறுவனத்திற்கும், தோட்டக்கலை துறைக்கும் புகார் அளித்தார். அதனடிப்ப டையில் அதிகாரிகள் கருகி சேதமான பயிர் களை நேரில் பார்வையிட்டனர். ஆனால், இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என வேதனையுடன் விவசாயி தெரி வித்துள்ளார். மேலும், 7 ஏக்கர் பயிரிடப்பட்ட மரவள்ளி கிழங்கு தற்போது அக்ரோ சர்வீஸ் வழங்கிய மருந்தால் கருகி சேதமானதால், சுமார் ரூ.15 லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயி வலியுறுத்தி உள்ளார்.