districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

‘சவுக்கு’ சங்கருக்கு ஜாமீன்

கோவை, ஜூலை 26- பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், ‘சவுக்கு’ சங்கருக்கு ஜாமீன் வழங்கி கோவை குற்றவி யல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய பிரபல யூடுபர்  ‘சவுக்கு’ சங்கர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மீது கோவை குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, ஜாமின் கோரி கோவை குற்றவியல் நான்காவது நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கறி ஞர் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதிபதி சரவணபாபு ஜாமீன் வழங்கினார். தமிழகத்தில் வழக்கறிஞர் கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால், தில்லியில் இருந்து வழக்கறிஞர் மௌலி வெள்ளிமலை ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம்  கோவையில் 66 ஆயிரம் மாணவர்கள் பயன்!

கோவை, ஜூலை 26- முதல்வரின் சிற்றுண்டி திட்டத்தின் கீழ், கோவையில் 66 ஆயிரத்து 164 மாணவ, மாணவிகள் பயனடைந்து வரு கின்றனர். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் கடந்த 2022 ஆம்  ஆண்டு துவங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வியை மேலும் பரவலாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும், தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப்  பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப் பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள 22 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள் ளது. கோவை மாநகராட்சி 18,969 மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட நகராட்சிகள், பெரியநாயக்கன்பாளையம், சர்க் கார் சாமக்குளம், அன்னூர் உள்ளிட்ட பேரூராட்சிகளிலுள்ள 995 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 65 ஆயிரத்து 556 மாணாக் கர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, அன்னூர், காரமடை, சுல்தான்பேட்டை, சூலூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள 22 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 608 மாணக்கர்களுக்கு காலை  சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 1017 பள்ளிகளில் பயிலும் 66,164 மாணவ மாணவியர்கள் காலை சிற்றூண்டி வழங்கப் பட்டு பயனடைந்து வருகின்றனர் என கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

சிப்காட் திட்டத்தை கைவிடுக: விவசாயிகள் வெளிநடப்பு

நாமக்கல், ஜூலை 26- சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி வெள் ளியன்று நாமக்கல்லில்  விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலிருந்து இருந்து விவசாயி கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா வில் உள்ள வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி உள்ளிட்ட கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்பகுதியில் சிப்காட் அமைந்தால் விவசாய நிலங்கள் பாதிக் கும், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே, இங்கு சிப்காட் அமைப்பதற்கு விவசாயி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  மேலும், சிப்காட் எதிர்ப்பு இயக்கும் என்ற அமைப்பை ஏற்படுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில்  நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயி கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இருந்து அனைத்து விவசாயிகளும் வெளிநடப்பு செய்தனர். இந்த நிகழ்வில் சிப்காட் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கம்யூ னிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பழனி வேல், சரவணன், ராமசாமி, தண்டபாணி, ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவை, ஜூலை 26- வெள்ளலூர் அருகே சேறும், சகதியு மாக காணப்படும் சாலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதி யில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் பல்வேறு சாலை களில் எரிவாயு இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற னர். கடந்த சில மாதங்களாக சாலைகளை தோண்டி இந்தப் பணிகள் செய்யப்பட்டு வரு கிறது. இதன் காரணமாக சாலைகள் சேதம டைந்து குண்டும், குழியுமாக காணப்படு கின்றன. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறியுள்ளன. இதனால் அந்த சாலைகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு இடையே பயணித்து வருகின்றனர். சேறு அதிகளவில் இருப்பதால் நடப்பவர்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்ற னர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், “கேஸ் மற்றும் குடிநீர் இணைப்பிற்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இப்பணி களை கோடைக்காலத்திலேயே முடித்தி ருக்க வேண்டும். தற்போது மழைக்காலத் தில் பணிகள் நடப்பதால், சாலைகள் அனைத்தும் சேதமடைந்து சேறும், சகதியு மாக உள்ளன. இச்சாலைகளில் பயணிப்பவர் களின் உடைகளும், வாகனங்களும் சேறும், மண்ணும் அப்பி அழுக்கு அடைக்கின்றன. நடந்து கூட செல்ல முடியாத நிலை உள் ளது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைத்துத்தர வேண்டும், என்ற னர். இதேபோல குனியமுத்தூர் பகுதியில் குடிநீர் இணைப்பு பணிகளுக்காக சாலை கள் தோண்டப்பட்டுள்ளன. இந்த சாலை பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலை களை இணைக்கும் பிரதான சாலையாக இருப்பதால், நாள்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் இந்த சாலை வழி யாக செல்லும். இந்நிலையில், சாலை தோண்டப்பட்டு இருப்பதாலும், மழைக்கா லம் என்பதாலும், சாலைகள் சேறும், சகதி யுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் மட்டுமின்றி நடந்து செல்பவர்கள் கூட இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாற்றுப்பாதையில் பல கிலோ மீட்டர் சுற்றி வாகன ஓட்டிகள் செல்ல வேண்டி யதாக உள்ளது. இதனால் இந்தப் பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரி வித்தனர்.

குடோனில் புகையிலை பதுக்கியவர் கைது

சேலம், ஜூலை 25- சேலம் மாவட்டம் ஆட் டையாம்பட்டி அடுத்துள்ள கொம்பாடிப்பட்டி பகுதி யில் செங்கோடன் மகன் செந் தில்குமார் (44), மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான  குடோ னில், புகையிலை பொருட் கள் இருப்பதாக வந்த தகவ லின்பேரில் போலீசார்,சோ தனை நடத்தினர்.அதில் ரூபாய் 18,800 மதிப்புள்ள 32,300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய் தனர். இதையடுத்து, தலை மறைவான செந்தில்கு மாரை தேடி வந்த நிலை யில், நேற்று அவரை போலீ சார் கைது செய்து சிறை யிலடைத்தனர்.

5 வருடத்திற்கு பிறகு  சேலத்தில் அரசு பொருட்காட்சி

சேலம், ஜூலை 26- சேலத்தில், ஐந்து ஆண்டுக்கு பிறகு சேலம் போஸ்  மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடக்கிறது. இதற் க்கான பணிகள் நடைபெற்று வருகிறது.  சேலத்தில் ஆடிப்பண்டிகை தினத்தில் போஸ் மைதானத் தில் அரசு பொருட்காட்சி விழா நடக்கும். இதற்காக அரங்கு கள், கடைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரு கிறது. இந்த பொருட்காட்சி 60 நாட்களுக்கு மேலாக நடக்கும். அரசு பொருட்காட்சி நடக்கும் நாளில் சுமார் பத்து லட்சத் திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தருவார்கள். இந்த பொருட் காட்சியில் அரசுத்துறையின் அரங்குகள், பெண்கள் ஆபரண, அலங்கார பொருட்கள் கடைகள், டெல்லி அப்பளம், பஜ்ஜி  கடைகள், ராட்டினம் போன்ற ஏராளமான விளையாட்டு சாத னங்கள் இடம்பெறும். சேலம் பழைய பேருந்து நிலையம் கட்டடம் பழுத டைந்தது. அக்கட்டடத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூ.96 கோடியில் புதியதாக பேருந்து நிலையம் பணி கடந்த  2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பணிக்காக கடந்த  2019 ஆம் ஆண்டு முதல் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி விழா நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி சொந்த மான காலி நிலத்தில் அரசு பொருட்காட்சி விழா நடத்தப்பட் டது. கடந்தாண்டு 2023 ஜூலையில் பேருந்து நிலையத் திறப்பு விழா நடைபெற்றது. இதன் பின்னர் போஸ் மைதானம் சீர மைக்கப்பட்டது. இதனையடுத்து, ஐந்து ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடப்பாண்டு போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக ஆங்காங்கே குழிதோண்டி கம்புகள் கட்டி அரங்குகள், கடைகள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இப்பணிகள் ஓரிரு நாட்கள் நிறைவ டைந்து வருகின்ற ஆக.7ம் தேதி முதல் 9ம் தேதி வரை  ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதற்குள் அரசு  பொருட்காட்சி திறப்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

உணவகத்திலிருந்த பணம், காசோலை திருட்டு

உணவகத்திலிருந்த பணம், காசோலை திருட்டு கோவை, ஜூலை 26- சூலூர் அருகே மதுபோதையில் ஊராட்சி வார்டு உறுப்பி னருக்கு சொந்தமான உணவகத்திற்குள் புகுந்து பணம் மற்றும் காசோலைகளை திருடிச்சென்ற வாலிபரை பொதுமக் கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள நீலாம்பூர்  பகுதியில் முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி வார்டு உறுப்பி னர் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான உணவகம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திங்களன்று காலை வழக்கம் போல தேவராஜ் உணவகத்தை திறந்துள்ளார். அப் போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.10,500 மற்றும் வங்கி  காசோலைகள் காணாமல் போனது தெரியவந்தது. உடனடி யாக உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில், நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உணவகத்தின் கதவை திறந்து உள்ளே நுழைந்து, கல்லாப்பெட்டியில் இருந்த பணம், காசோலைகளை திருடிவிட்டு மதில் சுவரில்  ஏறி குதித்து வெளியேறியதும் பதிவாகியிருந்தது. இச்சம்ப வம் அக்கம் பக்கத்தினர் இடையே பரவிய நிலையில், உண வகத்துக்கு எதிர்ப்புறம் உள்ள துணிக்கடை ஊழியர்கள் தங்க மிடத்திற்கு வெளியே உணவகத்தின் பெயரில் வங்கி காசோ லைகள் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தேவராஜ் அக் கம், பக்கத்தினரை அழைத்துக் கொண்டு அங்கு சென்ற போது, அறையில் இருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். தேவராஜுடன் வந்த பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்பதும், மது போதையில் உணவகத்துக்குள் புகுந்து பணம் மற்றும் காசோலைகளை திருடியதையும், போதையில் தன் அறைக்கு வெளியிலேயே அவற்றை வைத்துவிட்டு தூங்கச் சென்றதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வசந்தகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

குப்பையில் விழுந்த நகையை மீட்டுக்கொடுத்த தூய்மைப் பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு

கோவை, ஜூலை 26- குப்பையில் தவறுதலாக விழுந்த தங்கநகையை மீட்டு,  உரிமையாளரிடம் கொடுத்த தூய்மைப் பணியாளர்களுக்கு கோவை மாமன்ற கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டம், கோவைப்புதூரை சேர்ந்தவர் சிவ காமி (47). இவர் தனது 6 பவுன் தங்க நகையை ஒரு கவரில் போட்டு வைத்திருந்தார். அந்த கவரை அவர் தவறுதலாக குப்பையில் போட்டு தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத் துள்ளார். சிறிது நேரத்தில் அவர் தனது நகையை தேடி பார்த்த போது தான், குப்பையில் நகையை போட்டது தெரியவந்தது. இதன்பின் நகையை மீட்க முயற்சி செய்தார். தொடர்ந்து தூய்மைப்பணி மேற்பார்வையாளர் மணிகண்டன், தூய் மைப் பணியாளர்கள் ராணி, சத்யா, சாவித்திரி ஆகியோர் அப்பகுதியில் சேகரித்த ஒன்றரை டன் குப்பையை கீழே கொட்டி தங்க நகையை கண்டுபிடித்து சிவகாமியிடம் ஒப்ப டைத்தனர். இந்நிலையில், குப்பையில் போட்ட நகையை மீட்டு கொடுத்த தூய்மைப் பணியாளர்களுக்கு, வெள்ளி யன்று நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.