districts

img

உதகை: ரோஜா செடிகளுக்கு 50 டன் இயற்கை உரம்

உதகை, பிப்.24- கோடை சீசனுக்காக உதகை ரோஜா பூங்காவை தயார் படுத்த, செடிகளுக்கு 50 டன் இயற்கை உரமிடப்பட்டு வரு கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை கண்காட்சி கள் நடத்தப்பட்டு வருகிறது. கோடை சீசனை முன்னிட்டு உத கையிலுள்ள ரோஜா பூங்காவை தயார்படுத்தும் பணி தீவி ரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவில் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 ஆயிரத்து 201 ரோஜா ரகங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவை கண்டு ரசிக்க நிலா  மாடம், காட்சி முனைகள் அமைக்கப்பட்டு உள்ளது.  கோடை சீசனையொட்டி ரோஜா செடிகளை கவாத்து  செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி யது. அந்த செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள் பூக்கும் வகை யில் இயற்கை உரம் இடும் பணியில் பணியாளர்கள் ஈடு பட்டு வருகின்றனர். இதற்காக உதகை அருகே உள்ள  சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆட்டு சாணம் 50 டன் கொள்முதல் செய்து கொண்டு வந்து ரோஜா செடிகளுக்கு உரமாக இடப் பட்டு வருகிறது. தொடர்ந்து ஆட்டு சாணம், மண்ணோடு கலந்து செடிகளுக்கு ஊட்டமளிக்கும் வகையில் பணியாளர் கள் மண்ணை மாற்றி விடுகிறார்கள். இதைத்தொடர்ந்து மாட்டு சாணம், காளான் கழிவுகள் உரமாக போடப்பட உள் ளது. நீலகிரியில் நடப்பாண்டில் கோடை சீசனையொட்டி தோட்டக்கலை பூங்காக்களில் கண்காட்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.