districts

img

கேரளாவில் திருடி திருப்பூரில் அடமானம் வைத்த 5.3 கிலோ தங்கம் பறிமுதல்; வங்கி மேலாளர் கைது

திருப்பூர், ஆக. 24 – கேரளாவில் தேசியமய வங்கி யில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை, வங்கி மேலாளரே திருடி, தமிழகத்தில் தனியார் பன் னாட்டு வங்கியின் கிளைகளில் அடமானம் வைத்திருந்தார். கேரள காவல் துறையினர் விசாரணை நடத்தி அந்த வங்கி மேலாளரை கைது செய்து, அவரை அழைத்து வந்து திருப்பூரில் பன்னாட்டு வங்கி யில் அடமானம் வைக்கப்பட்டி ருந்த 5 கிலோ 300 கிராம் தங்க நகை களை பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை எடோடியில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா கிளை செயல்படுகிறது. இங்கு, திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மேட்டுப் பாளையத்தை சேர்ந்த மாதா ஜெயக்குமார் (34) என்பவர் மேலா ளராக பணியாற்றினார். ஓராண்டுக் குப் பின் எர்ணாகுளத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். எடோடி வங்கிக்கிளையில் புதி தாக வேறொரு மேலாளர் பொறுப் பேற்ற நிலையில் அங்கு தணிக்கை நடைபெற்றது. இதில் வங்கியில் பலர் வைத்த நகைகள் போலியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி அதிகாரிகள் நடத்திய விசா ரணையில் ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பில் 26 கிலோ 800 கிராம் நகைகள் போலியாக இருப்பது தெரியவந்தது. இதனிடையே மாதா ஜெயக் குமார் எர்ணாகுளம் கிளையில் பொறுப்பேற்காமல் தலைமறைவு ஆனார். மகாராஷ்டிரா வங்கி கிளை சார்பில் வடகரை காவல் நிலையத்தில் இந்த மோசடி குறித்து புகார் செய்யப்பட்டது. காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். தலைமறைவான மாதா ஜெயக்கு மாரை தேடி கடந்த சில தினங்க ளுக்கு முன்பு தெலுங்கானா மாநி லத்தில் வைத்து கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசா ரணையில், வாடிக்கையாளர்கள் வங்கியில் அடமானம் வைத்த அசல் நகைகளை எடுத்துக் கொண்டு போலி நகைகளை அங்கே வைத்து, கையாடல் செய்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், திருப்பூரில் உள்ள தனியார் வங்கி கிளைகளில் அசல் நகைகளை அடமானம் வைத்திருப் பது தெரியவந்தது. திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே அவிநாசி சாலையில் உள்ள டிபிஎஸ் (டெவலப்மெண்ட் பேங்க் ஆப் சிங்கப்பூர்) எனும் பன்னாட்டு வங்கியில், இந்த நகைகளை மீட்க கேரள காவல் துறை துணைக்  கண்காணிப்பாளர் ஜி.பாலச்சந்தி ரன், உதவி ஆய்வாளர்கள் மனோஜ் குமார், பிஜூ விஜயன் ஆகியோர் கொண்ட குழு வந்தது. திருப்பூர் மாநகரக் காவல் உதவி ஆணையர் நல்லசிவம் தலைமையிலான குழு வினருடன் வங்கிக்குச் சென்று அங்கு அடமானம் வைக்கப்பட்டி ருந்த இந்த நகைகளை மீட்டனர். திருப்பூர் சந்திராபுரம் கே.என்.பி. காலனி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த கார்த்திக் (29) என்பவர் மூலம் மாதா ஜெயக்குமார் இங்கு அடமானம் வைத்து பணம் பெற்ற தும் தெரியவந்தது. கேரள காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மாதா ஜெயக்குமாருடன் திருப்பூர் வந்த நிலையில், கார்த்திக் தலை மறைவானார்.  திருப்பூர் காங்கயம் சாலைக ளில் உள்ள, டிபிஎஸ் வங்கியின் மற் றொரு கிளையிலும் காவல் துறையி னர் மற்றும் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இரு இடங்களி லும் மொத்தம் 5 கிலோ 300 கிராம் நகைகளை மீட்டனர். ரூ 17 கோடியே 50 லட்சம் மதிப் புள்ள நகைகள் திருடப்பட்ட நிலை யில் ஒரு பகுதி நகைகள் மட்டுமே இங்கு மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு பகுதிகளில் நகைகளை வைத்திருக்கலாம் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர் விசாரணை நடை பெற்று வருவதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்த னர்.

வங்கி மேலாளர் திருடி வந்து அடமானம் வைத்த டிபிஎஸ் (டெவலப் மெண்ட் பேங்க் ஆப் சிங்கப்பூர்), ஆசியாவிலேயே பாதுகாப்பான வங்கி  என்று விளம்பரம் செய்து வருகிறது. வங்கித் துறையில் அயல்நாட்டு  வங்கிகளை அனுமதிப்பது என்று மோடி அரசின் கொள்கையின் தொடர்ச்சியாக பல வெளிநாட்டு வங்கிகள் இங்கு கிளைகளைத் தொடங்கியுள்ளன. டிபிஎஸ் வங்கி நிர்வாகம், பாதுகாப்பு, முதலீடு, வைப்புநிதிக்கு அதிக வட்டி, சிறந்த சேவை என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு முயற்சி  செய்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தனிநபர் நபர் கிலோ கணக்கில் நகை களை அடமானம் வைக்கும்போது அது குறித்து சந்தேகம் ஏற்பட்டு,  ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் பெரிய வங்கி, அதிக வர்த்த கம், பரிவர்த்தனை செய்யும் வங்கி என்று காட்டிக் கொள்வதற்காக, மோசடி செய்து கொண்டு வரப்பட்ட நகை என்பது தெரிந்தே அதை டிபிஎஸ் வங்கி நிர்வாகம் அடமானம் வைக்க ஒப்புக் கொண்டார் களா? என்று வங்கித்துறை ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் அரசுத் துறை, தேசியமய மாக்கப்பட்ட வங்கி கள் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பும், நம்பகத்தன்மை யும் மிக்கதாக இருக்கும் நிலையில், இது போன்ற பன்னாட்டு, தனியார் வங்கிகள் நம்பகத்தன்மை இல்லாதவை என்பதை இந்த சம்பவம் நிரூபிக்கிறது என்றும் அவர்கள் கூறினர்.