கோவை, ஜூலை 28- கோவை புத்தக திருவிழாவை முன் னிட்டு, 400 பள்ளிகளைச் சேர்ந்த5 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் திருக் குறள் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி வியாழ னன்று நடைபெற்றது. கோவை மாவட்டம், கொடிசியா வளாகத் தில் மாவட்ட நிர்வாகம். கொடிசியா, தென் னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப் பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து 6 ஆவது ஆண்டாக நடத்துகின்ற புத்தக திரு விழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழா வின் ஒரு அங்கமாக 400 பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர்கள் ஒரே இடத்தில் திருக்குறள்களை வாசிக்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடை பெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கொடிசியா தலைவர் வி.திருஞானம், புத்தக திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், துணைத்தலைவர் ரமேஷ்கிருஷ்ணன், ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் ராஜாராம் மற்றும் பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசுகையில், இந்த புத்தக திருவிழாவில் நூல் வெளியீடு உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச் சிகள் நடைபெற்று வருகின்றன. இதன்ஒரு பகுதியாக 400 பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்க ளின் திருக்குறள் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவி யர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்கு விக்கும் வகையில் பேச்சுப்போட்டிகள் நடத் தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்க ளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கோவை புத்தக திருவிழாவில் வெள்ளியன்று பேராசியர் சாலமன் பாப்பயைாவின் பட்டி மன்றம் நடைபெறவுள்ளது என்றார்.