districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கத்திகுத்து: மாணவர்கள் 5 பேர் கைது

திருப்பூர், மார்ச் 28 - திருப்பூர் ராயபுரம் அணைமேடு பகுதியை சேர்ந்தவர் சி.விஜய் (24). இவர் சுமை தூக்கும் தொழில் செய்து வருகி றார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஹரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் மோதிக் கொண் டுள்ளனர். இந்நிலையில், திங்களன்று இரவு விஜய், சூசையா புரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  அவருக்கும், ஹரிஹரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.  அப்போது, ஹரிஹரன் நண்பர்களும் சேர்ந்து விஜய்யை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு 5 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜய்யை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீ சார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கல்லூரி மாண வர்கள் ஹரிஹரன் (23), பிரகதீஸ்வரன் (21), ஸ்ரீநிவாஸ் (19), கவுதம் (21), ஹரிஷ் (19) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரி  திருப்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திருப்பூர், மார்ச் 28 - தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது  தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் கள் நடைபெற்று வரும் நிலையில், நாடா ளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்றத் தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். கடந்த மாதம் தூத்துக்குடியில் வழக் கறிஞர் முத்துக்குமார் பட்டப்பகலில்  ரவு டிகளால் கொடூரமாக கொல்லப்பட் டார்.  சென்னை சைதாப்பேட்டை வழக்க றிஞர் சங்கத்தின் செயற்குழு உறுப்பி னர் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கடந்த  ஞாயிறன்று சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள் ளார். தமிழகத்தில் வழக்கறிஞர்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து படு கொலை செய்யப்படுவதும், தாக்கப்ப டுவதும், மிரட்டப்படுவதும் தொடர்ந்து  வருவது வன்மையாக கண்டிக்கத்தக் கது. கடந்த மார்ச் 22 அன்று நாமக்கல்  பரமத்தி வழக்கறிஞர் துரைசாமி  வீட்டில்  சமூக விரோதிகள்  இரவில் அத்துமீறி நுழைந்து 3 டிராக்டர்களையும், பொருட் களையும் சேதப்படுத்தி, தீயிட்டு கொளுத்தி வழக்கறிஞருக்கும், அவரது  குடும்பத்தார்க்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கடந்த 24 அன்று கோயம்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சு நடந்துள்ளது. எனவே, இது போன்ற செயல்களை  இரும்பு கரம் கொண்டு தமிழக முதல்வர்  தடுத்திடவும், குற்றவாளிகளை காவல் துறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட வலியுறுத்தியும், நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்களுக்கும், வழக்காடிகளுக்கும் உரிய பாதுகாப் பினை தமிழக அரசு வழங்கிட வலியுறுத் தியும், வழக்கறிஞர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வகையில் மத்திய அரசு உடனடியாக பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தியும், அதே நேரத்தில் தமி ழக அரசும், சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி, வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை  அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழு வதும் மார்ச் 28 செவ்வாய் அன்று வழக்க றிஞர்கள் நீதிமன்றங்களில் பணிக்கு செல்லாமல் விலகி இருக்க முடிவு செய் தனர். இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணிக்குச் செல்லாமல் நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருட்டு வண்டிய எங்கே வைப்பது

 ஈரோடு, மார்ச் 28- காவல் துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்த நீதித்துறை அனுமதி மறுப்பதாகவும், திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்படுகிற வாகனங்களை வைக்க சொந்த இடம் இருந்தும், பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து  ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வாலிபர் சங்கத்தினர் அளித்த  மனுவில் தெரிவித்திருப்பதாவது, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நூறு ஆண்டு களுக்கு மேலாக காவல் நிலையம் உள்ளது. ஆவணப்படி,   காவல் நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் பெருந்துறை  நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. பின்னர், நீதிமன்றத் திற்கென இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் காவல்  கவாத்து பயிற்சி நடைபெற்று வந்தது. இதனை நீதிபதிகள்  குடியிருப்பாக செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில்,  பழைய நீதிமன்றம் புதுப்பிக்கப்பட உள்ளது. எனவே, காவல்துறை அந்த இடத்தை பயன்படுத்தக்  கூடாது என கூறப்படுகிறது. காவல் துறையினர் வாக னங்கள், குற்றங்களில் பிடிபடும் வாகனங்கள், காவல் நிலை யத்திற்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம்  தேவைப்படுகிறது. ஆனால், காவல்நிலைய பயன்பாட்டில் உள்ள இடத்தை காலி செய்ய நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து வருவாய் கோட் டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் தந்தையின் நண்பர் போக்சோவில் கைது

கோவை, மார்ச் 28 - கோவை அருகே தண்ணீர் கேட்பது போல் நடித்து, வீட்டுக்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடு பட்ட ஒருவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய் தனர். கோவை - பேரூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.  இவரது பெற்றோர் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வரு கிறார். திங்களன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சிறுமியின் தந்தையின் நண்பர் அதே பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் (41), இவர் வீட்டுக்கு வந்து சிறுமியிடம் குடிக்க  தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது வீட்டில்  சிறுமியை தவிர வேறு யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்ட காளீஸ்வரன் சிறுமியை பின் தொடர்ந்து வீட்டுக்குள்  புகுந்து அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடு பட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார்.  இதில், பயந்துபோன காளீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி  விட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமி தனது பெற் றோரிடம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காளீஸ் வரனை கைது செய்தனர்.

கஞ்சா விற்ற 7 பேர் கைது

கோவை, மார்ச் 28- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை கோவை போலீசார்  கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை - பீளமேடு போலீசார் திங்களன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடிசியா ரோட்டில்  சந்தேகம்படும் படி நின்றிருந்த 5 பேர்  கொண்ட கும்பலை  போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு  பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களிடம் சோதனை  செய்ததில்,அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது  தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடு பட்ட பீளமேடு பகுதியை சேர்ந்தகார்த்திக் (33), சபி முகமத்  (33), நாகசாமி (29), சிவா (28) மற்றும் தீபன் ராஜ் (20)  ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்  இருந்து 3.100 கிலோ கஞ்சா, 3 இருசக்கர வாகனங்கள்  மற்றும் ரூ.7,800 ரொக்கம் பறிமுதல் செய்தனர்.  இதேபோல், கடைவீதி போலீசார் கோவை தெற்கு உக்கடம் காந்திநகரில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு  கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த தெற்கு உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த மெக்கானிக் அப்துல் காதர்  (23), ராமமூர்த்தி (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து 160 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும்  நீதிமன் றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் கோவையில் ஏப்.1 ஆம் தேதி முதல் அமல்

கோவை, மார்ச் 28- காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை கோவை மாவட்டத்தில் ஏப்.1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை களில், மதுபானங்களை வாங்கிப் பயன் படுத்திவிட்டு, காலி மதுபான பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும், விளை நிலங்களிலும், மக்கள் கூடும் பொது  இடங்களிலும் சிலர் வீசி வருகின்றனர். வனப் பகுதிகளில் வீசப்படும் பாட்டில்களால் வன  உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படவும்,  சுற்றுப்புறம் மாசுப்படவாய்ப்புள்ளது.  இதனைத் தடுக்கும் பொருட்டு  ஏப்.1ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலேயே காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் செயல் படும் அனைத்து மதுபான சில்லறை விற் பனைக் கடைகளிலும் விற்பனை செய்யப் படும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களிலும் ரூ.10 கூடுதல் தொகைக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் பின், வாடிக்கையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டப் பட்ட மதுபான காலி பாட்டில்களை கடையில்  திரும்ப ஒப்படைக்கும்போது ஏற்கனவே  பெறப்பட்ட ரூ.10-ஐ திரும்ப வாடிக்கை யாளர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டம் முழுமையாக நிறைவேற வாடிக்கையாளர்கள் காலி மதுபானப் புட்டி களை, டாஸ்மாக் மதுபான சில்லறை விற் பனைக் கடைகளில் ஒப்படைத்து மாவட் டத்தின் வனப்பகுதியையும், விளை நிலங் களையும் மற்றும் பொது இடங்களையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை – பீகாருக்கு சிறப்பு ரயில்

கோவை, மார்ச் 28- கோவையிலிருந்து பீகாருக்கு வாராந்திர சிறப்பு ரயில் ஏப்.5 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பீகாரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இந்நிலையில், கோவை - பீகார் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து  சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவையிலிருந்து பீகார் மாநிலம், பராணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஏப்.5 ஆம்  தேதி முதல் வாரத்தின் புதன் கிழமை தோறும் இரவு 12.50 மணிக்கு கோவை ரயில் நிலை யத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 03358) வெள்ளி யன்று காலை 6 மணிக்கு பீகார் மாநிலம், பராணி சென்றடை யும். இந்த ரயில் வரும் மே 3 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக ஏப்.1 ஆம் தேதி முதல் பராணியி லிருந்து சனியன்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 03357) செவ்வாயன்று அதிகாலை 4 மணிக்கு கோவை வந்த டையும். இந்த ரயிலானது வருகிற ஏப்.29 ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயிலில் ஏசி 2 டயர் பெட்டிகள் - 2, ஏசி 3 டயர்  பெட்டிகள் - 4, தூங்கும் வசதி பெட்டிகள் - 12, பொதுப்பிரிவு – 2 ஆம் வகுப்பு பெட்டிகள் – 4 இணைக்கப்பட்டு இருக்கும். இந்த சிறப்பு ரயில் ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி,  நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எழுறு, ராஜமுந்திரி, விசா கப்பட்டினம், விழியங்கரம், ராயகடா, திட்டலகார், சம்பலூர், ஜார்சுடா, ரோர்கேலா, ஹத்தியா, ராஞ்சி, முறிபோகரோ ஸ்டீல் சிட்டி, தன்பாத், பராக்கர், சித்தரஞ்சன், ஜமந்தரா, மது புர், ஜாஜ்ஹா, கியூல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று  செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உலக நாடக தினம்

ஈரோடு, மார்ச் 28- ஈரோடு நாடக கொட்டகையில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் புதனன்று (இன்று) உலக நாடக தினம் கொண்டாடப்படுகிறது. இதில் கூத்துப்பட்டறை வழங்கும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “நான் புதுமைப்பித்தன்” என்னும் நவீன நாடகம் கே.எஸ்.கருணாபிரசாத் நெறி யாள்கையில் இடம் பெறுகிறது. களரி தொல் கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையத்தினரின் “பாஞ்சாலி சப தம்” என்னும் தெருக்கூத்து நாடகம் அரங்கேற்றம் பெறு கிறது. இவற்றைக் காண ஈரோடு -சென்னிமலை சாலை யிலுள்ள டீசல் செட் எதிரில் உள்ள ஈரோடு நாடகக்கொட் டகைக்கு அனைவரும் வருக என கோவை மண்டல கலை  பண்பாட்டு மைய உதவி இயக்குநர் அழைப்பு விடுத்துள் ளார். மேலும் விபரங்களுக்கு 98948 19032 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31ல் கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: ஆணையர் தகவல்

கோவை, மார்ச் 28- கோவை மாநகராட்சி பட்ஜெட் மார்ச் 31 ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திருந்திய திட்ட அறிக்கை 2023-24 ஆம்  ஆண்டுக்கான உத்தேச திட்ட அறிக்கை புதனன்று (இன்று) தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நி லையில், சென்னையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் ஒரே  நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உத்தரவிடப்பட்டது. அதன்படி கோவை உட்பட மற்ற மாநகராட்சிகளில் மார்ச் 31  ஆம் தேதியன்று (வெள்ளியன்று) பட்ஜெட் தாக்கல் செய்யப் பட உள்ளது. அன்றைய தினம் (மார்ச் 31) காலை 10  மணிக்கு கோவை மாநகராட்சி அலுவலகமான விக்டோரியா அரங்கில் வரவு - செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப் படும் என மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள் ளார். கடந்தாண்டு தாக்கல் செய்த 2022-2023 ஆம் ஆண்டுக் கான திட்ட அறிக்கையில் ரூ.19.31 கோடி பற்றாக்குறை ஏற் படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சொத்து வரி உயர்த்தப்பட்டது. குப்பை வரி வசூலித்திருப்பதால், மாந கராட்சி வருவாய் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதனால் மார்ச் 31 ஆம் தேதியன்று தாக்கல் செய்யும் திருந்திய திட்ட  அறிக்கையில் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது. வரும்  நிதியாண்டில் எதிர்பார்க்கும் வருவாயும், அதிகமாக இருக்கு மென எதிர்பார்ப்பதால் மாநகராட்சி பொது நிதியில் வளர்ச்சி பணிகளுக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கவுன்சிலர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. மண்டல அளவில் வார்டு பணிகளுக்கு கடந்தாண்டு ஒதுக்கிய ரூ.10 கோடியை வருகிற நிதியாண்டில் ரூ.20 கோடியாக அதிகரிக்க வேண்டும். குறுக்கு வீதிகள், சந்துகளில் ரோடுகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். மழைநீர் வடிகால் கட்ட வேண்டும். விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க வேண்டும். உள் விளை யாட்டு அரங்கம் ஒதுக்க வேண்டும் என மண்டல தலை வர்கள், நிலைக்குழு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

6 ஆவது நாளாக தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்

உதகை, மார்ச் 28- பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி உதகையில் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியா ளர்களின் சிறப்பு காலமுறை ஊதி யத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தோட்டக்கலைத் துறையில் தினக்கூலியாக 5 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றும் பூங்கா பண்ணை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள் ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு  நடவடிக்கையும் எடுக்காததால், மார்ச் 23 ஆம் தேதி முதல் தோட்டக் கலைத்துறை ஊழியர்கள் பணிக ளைப் புறக்கணித்து உதகை அரசு தாவரவியல் பூங்காவில் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழையிலும் குடைகளுடன் போராட் டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், சனி யன்று மரத்திற்கு மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தோட்டக்கலைத் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதத்தில் சுழற்சி முறையில் பணியாளர்கள் கலந்து கொள்ள போவதாக அறி வித்துள்ளனர். மேலும், இந்த பிரச்ச னைக்கு நடவடிக்கை எடுக்காத வரை உண்ணாவிரத போராட்டம் தொட ரும் என்று அறிவித்துள்ளனர். இப் போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள 8 பூங்காக்களிலும், செடிக ளுக்கு நீர் பாய்ச்சுதல், குப்பைகளை அகற்றுதல் உள்பட பல்வேறு பணி கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டம் தொடர்ந்தால் மலர் கண் காட்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற் பட்டு உள்ளது.