districts

ஆட்டோ மீது கார் மோதி விபத்து: 5 பேர் மருத்துவனையில் அனுமதி

பென்னாகரம், டிச.21- பென்னாகரம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள் ளானதில், பலத்த காயமடைந்த 5 பேர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சின்னகடமடை பகுதி யைச் சோ்ந்தவர் சிவாஜி மகன் நாக ராஜ் (33). ஷேர் ஆட்டோ ஓட்டுநரான இவர் பென்னாகரம் வாரச்சந்தைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்தார். அப்போது, பென்னாகரம் -  மேச்சேரி செல்லும் சாலையில் சென்று  கொண்டிருந்தபோது, ஆட்டோ மீது  எதிரே வந்த கார் மோதியது. இந்த விபத் தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த நாக ராஜ் (33), பூர்ணிமா (23), மித்ரன் (24), மல்லிகா (25), வருண் பிரசாந்த் ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து 5 பேரும் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு, மேல்  சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து  பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.