districts

img

பேரணியுடன் துவங்கிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் 4 ஆவது திருப்பூர் மாவட்ட மாநாடு

உடுமலை, ஜூலை 17- கல்வி வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் திருப்பூர் மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின்    4 ஆவது மாவட்ட மாநாடு உடுமலையில் 17  மற்றும் 18 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முதல் நிகழ்வாக 17 ஆம்  தேதி ஞாயிறன்று மாலை உடுமலை  மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் இருந்து மாற்றுத்திறனாளிகளின் பேரணி துவங்கி யது. பின்னர் மாநாடு நடைபெறும் உடுமலை நகராட்சி அலுவலகம் அருகில் பொதுக்கூட் டம் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்திற்கு மாநாட்டின் வர வேற்க்குழு தலைவர் பாலதண்டபாணி தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு துணை தலைவர் ஜெகதீசன் அனைவரையும் வரவேற்றார். பொதுகூட்டத்தின் சிறப்புரை யாக மாநில பொதுச்செயலாளர் எஸ். நம்பு ராஜ், மாநில செயலாளர் டி. வில்சன், மாவட்ட  தலைவர் டி. ஜெயபால், மாவட்ட செயலா ளர் பா. ராஜேஷ், மாவட்ட பொருளாளர் ஆர்.  காளியப்பன்  மற்றும் மாவட்டதுணை தலை வர் மாலினி ஆகியோர் உறையாற்றினார்.