districts

img

கோவை - திருச்சி சாலை மேம்பாலத்தில் 4 ஆவது விபத்து

கோவை, ஜூலை 20- கோவை - திருச்சி சாலை மேம் பாலத்தில் தொடர் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலை யில், புதனன்று நான்காவதாக  இரண்டு கார்கள் மோதி விபத்துக் குள்ளானது. இதனால், வாகன ஓட்டி கள் அச்சமடைந்துள்ளனர். கோவை - திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் விபத்துகள்  நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 2 பேர், பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். இதன் காரணமாக அந்த பாலத்தில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், வேகத்தடைகள் அமைக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே மீண்டும் ஒரு வர் பாலத்திலிருந்து கீழே விழுந்து  உயிரிழந்தார். இப்படி தொடர் உயிரி ழப்பு ஏற்பட்டு வந்த நிலையில், மேம் பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனிடையே புதனன்று கோவை அரசு மருத்துவ மனையிலிருந்து ராமநாதபுரம் நோக் கிச்சென்ற இரண்டு கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்று கொண் டிருந்தன. அந்த கார்கள் மேம்பாலத் தில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்றபோது, அங்கிருந்த வேகத் தடைகளை இரண்டு கார் ஓட்டிகளும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. திடீரென பிரேக் பிடித்ததில் இரண்டு  கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் காரில் பயணித்த வர்களுக்கு காயம் ஏற்பட்டது. இவ் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.  முன்னதாக கடந்த வாரம் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இப்பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது மேம்பாலத்தில் வளைவு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது என்றும், இதனை மாற்றி அமைப்பது குறித்து ஆய்வுக்குழு அமைக்கப்பட உள்ளது என தெரிவித்திருந்தார். இந் நிலையில் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த டுத்து விபத்து ஏற்படும் நிலையில் வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.