districts

img

சட்டவிரோத செங்கல் சூளைகள்: அவ்வளவும் விதிமீறல்கள் ரூ.433 கோடி அபராதம் விதிக்க ஆட்சியர் பரிந்துரை

கோவை, ஜூலை 30– தடாகம் செங்கல் சூளைகளில் சட்டவிரோதமாக மண் அள்ளப் பட்டதால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட் டுள்ளதை என்பதை கணக்கிடவே இயலவில்லை. அவ்வளவு விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது. முழு மையாக கணக்கீடு செய்ய முடிய வில்லை. இருப்பினும் தேசிய பசு மைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்த ரவு அடிப்படையில் 433 கோடி  ரூபாய் இழப்பீடு கணக்கிடப்பட் டுள்ளது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்கு கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு  பரிந்துரை செய்துள்ளது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை தடாகம் பள்ளத்தாக்கு  பகுதியில் உள்ள செங்கல்சூளை களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படு வது குறித்து தொடர்ந்து குற்றச் சாட்டு எழுந்து வந்தது. இது நாளி தழில்களிலும் தொடர்ந்து செய்தி யாக வெளியானது. இதனை அடிப் படையாகக் கொண்டு தென்மண் டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 

இந்த வழக்கை விசாரித்த தீர்ப் பாயம் 2021 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், “தடாகம் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், அங் குள்ள செயல்பாடுகளை எப்படி  முறைப்படுத்தலாம் என்பதை தெரி விக்கவும் குழு அமைக்கப்படு கிறது. இந்தக் குழுவில் கோவை  மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீட்டு ஆணையம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், புவியியல், கனிமவளத்துறையில் தலா ஒரு மூத்த அதிகாரி ஆகியோர் இடம் பெறுவார்கள். இவர்கள் அந்தப் பகுதியை ஆய்வு செய்து அங் குள்ள நடவடிக்கைகளால் அருகில் உள்ள நீர்நிலைகள், ஆறுகள், நீரோ டைகள் பாதிக்கப்பட்டுள்ளதா, அப்படியான பாதிப்பு ஏற்பட்டிருந் தால் அதனை சரி செய்ய தேவை யான நடவடிக்கைகள் குறித்து பரிந் துரைகளையும் தெரிவிக்க வேண் டும். பாதிப்பு ஏற்பட காரணமானவர் களிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப் புக்கான இழப்பீட்டு தொகையை  வசூலிப்பதற்கான கணக்கீட்டை யும் மேற்கொள்ள வேண்டும்”என உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தீர்ப்பாயம் அமைத்த  குழு தடாகம் பகுதியில் ஆய்வு செய் தது.

இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நிலைக்குழுவுக்கு கடந்த 20 ஆம் தேதி அனுப்பியுள்ள அறிக்கை வெளியாகியுள்ளது. இதில், தடாகம், நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், வீரபாண்டி, சோமை யாம்பாளையம், பன்னிமடை ஆகிய 5  கிராமங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகள் 2021 ஜூன் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணை யத்திடம் இந்த கிராமங்களில் செயல்பட்டு வந்த செங்கல் சூளை களின் உரிமையாளர்கள் எந்தவித  அனுமதியும் பெறவில்லை. மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தின் உத்தரவுகள் பின்பற்றப்பட வில்லை. எந்த செங்கல்சூளையி லும் காற்று மாசை தடுப்பதற்கான வழிமுறைகள் இல்லை. கோவை  வடக்கு வட்டாட்சியர் கடந்த 12 ஆம்  தேதி தாக்கல் செய்த அறிக்கையின் படி, சட்டவிரோதமாக தோண்டி எடுக் கப்பட்ட மண், கடத்தப்பட்ட மண்  அளவை 5 கிராமங்களில் அணுகக் கூடிய பகுதிகளில் மட்டுமே அள விடப்பட்டுள்ளது. இதுதவிர, தண் ணீர் தேங்கும் பகுதி, புதர்நிறைந்த பகுதி போன்ற இடங்களில் தோண் டப்பட்ட மண்ணின் அளவை, அள விட முடியவில்லை.

மேலும், இந்த 5 கிராமங்களில் டிஜிபிஎஸ் கொண்டு ஆய்வு செய்த தில், 1.10 கோடி கியூபிக்மீட்டர் அளவு மண் சட்டவிரோதமாக கடத் தப்பட்டுள்ளது. தீர்ப்பாயம் அமைத்த குழு ஆய்வு செய்தபோது மலையடி வாரம் அருகே உள்ள ஓடைகள், ஆற்று நீர்வழித்தடங்களில் சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டது தெரியவந்தது. அந்த ஓடைகள் வழியாகத்தான் தடாகம் மலையிலி ருந்து வரும் மழைநீர் ஆற்றை சென்று சேர வேண்டும். அந்த இடங்ளில் மண் தோட்டப்பட்டதால், நீரோட்டம் தடைபட்டு அங்கேயே தேங்கிவிடு கிறது. சட்டவிரோத மண் எடுப்பால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ள தோடு, அந்தப்பகுதியில் நீரோட்ட மும் தடைபட்டுள்ளது. எனவே, சட்ட விரோதமாத செயல்பட்ட 177 செங் கல் சூளைகளின் உரிமையாளர் களிடம் இருந்து இந்த பாதிப்புக ளுக்கான இழப்பீட்டு தொகையை பெறலாம். சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டதால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதை கணக்கிட இயலவில்லை. எனவே,  தேசிய பசுமைத் தீர்ப்பாய வழக்கறி ஞர்கள் சங்கம், குஜராத்தை சேர்ந்த விரேந்திரர் சிங்குக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத் தரவு அடிப்படையில் இழப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக அள்ளப்பட்ட 1.10 கோடி கியூபிக் மீட்டர் மண்ணுக்கு இழப்பீடாக ரூ.373.74 கோடி நிர் ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றி 177  செங்கல்சூளைகள் இயங்கியுள்ன. எனவே, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இழப்பீடாக ரூ.59.32  கோடியை சூளை உரிமையாளர் களிடம் இருந்து பெறலாம். இது போன்று செங்கல்சூளைகள் சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தவிர்க்கவும், அவற்றை முறைப்ப டுத்தவும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் (ஹாகா) அனுமதி பெற்ற பின்னரே சூளைகள் இயங்க அனுமதிக்க வேண்டும். 

மேலும், ஓடைகள், குட்டைகள், புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து எவ்வளவு மண் எடுக்கப்பட் டுள்ளது என்பதை அறிய அரசு அமைப்பு, நிறுவனம் மூலம் முழு மையாக ரிமோட் சென்சிங் சர்வே நடத்த வேண்டும். அப்போதுதான் முழுமையான புள்ளிவிவரம் கிடைக் கும். அந்த கணக்கெடுப்பில் கிடைத்த தகவல், ஏற்கெனவே டிஜிபிஎஸ் மூலம் கணக்கிடப்பட்ட தகவல் ஆகி யவற்றை தொகுத்து கிடைக்கும் விவரத்தை வைத்து செங்கல்சூளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் தலைமையிலான அமைக்கப்பட்ட குழுவினரின் அறிக்கையில் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.

(ந.நி)