districts

img

தோழர் ஈஸ்வரனின் 42 ஆவது நினைவு தினம் கடைப்பிடிப்பு

 திருப்பூர், டிச.1- தோழர் ஈஸ்வரனின் 42 வது நினைவு நினைவுதினத்தை யொட்டி வெள்ளியம்பாளையத்தில் உள்ள அவரது நினைவி டத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுக்கா குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள வெள்ளியம்பாளையம் கிராமத்தில் 1981  ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத் தலைவர்  ஈஸ்வரன், பெரும் வசதி படைத்த உள்ளூர்  நிலவுடைமையாளர்களின்  ஏவல் ஆட்கள் நடத்திய தாக்குத லில் படுகொலை செய்யப்பட்டார். தோழர் ஈஸ்வரனின் 42  ஆவது நினைவு தினத்தையொட்டி வெள்ளியன்று அஞ்சலி  செலுத்தப்பட்டது. இதில், கட்சியின்  மாவட்டக் குழு உறுப்பினர் கி.கனகராஜ்,  குடிமங்கலம் குழு உறுப்பினர்கள் வெ.ரங்கநாதன், அ.தங்கவ டிவேலன், இரா.ஓம்பிரகாஸ், மூத்த நிர்வாகி ஆர்.லட்சுமண சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.