திருப்பூர், பிப். 2 - அவிநாசி கருமாபாளையத்தில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல் லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் கள் 41 பேர் ரத்த தானம் செய்தனர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பாக தத்தெடுத்த கிராம மான கருமாபாளையத்தில் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் ஆறாம் நாளான வியா ழனன்று, கருமாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திருப்பூர் தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகா மில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கருமாபா ளையம் ஊராட்சி மன்ற தலைவர் பூங் கொடி சக்திவேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர். திருப்பூர் தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சரவணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு கலந்து கொண்டனர். இந்த முகாமில் மாணவர்கள் 41 யூனிட் ரத்த தானம் செய்தனர். முகாமில் 50க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாண விகளும் கலந்து கொண்டனர். முகாமிற் கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.