திருப்பூர், ஏப்.19 - திருப்பூரில் உள்ள பெம் பள்ளியில் கைவி டப்பட்ட இரண்டு ஆழ்குழாய்களில் (போர் வெல்) மழைநீர் சேகரிப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. இதன் பலனாக கடந்த சில ஆண்டுக ளில் அப்பள்ளியில் தண்ணீர் வற்றிய கிணற் றில் நீர் ஊற்று ஏற்பட்டு, இந்த கோடை காலத் திலும் தொடர்ந்து தண்ணீர் எடுக்கும் நிலை யிலும் 40 அடியில் தண்ணீர் இருக்கிறது. இது பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் முன்னாள் மாவட்டத் தலைவரும், ஜெய் வாபாய் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக செயல்பட்டவ ருமான ஆ.ஈசுவரன் தெரிவித்ததாவது: திருப் பூர் காங்கேயம் சாலையில் செயல்பட்டு வரும் பெம் பள்ளியில் 60 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணற்றில் தண்ணீர் மட்டம் குறைந்து விட்ட நிலையில் தூர் வாரும் பணியை மேற் கொண்டோம். அப்போதும் அதில் தண்ணீர் போதுமான அளவு கிடைக்கவில்லை. இதை யடுத்து பள்ளி வளாகத்திலேயே இரண்டு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1100 அடி மற் றும் 800 அடி என ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த இரு ஆழ் குழாய்களிலும் தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீர் வராத ஆழ்குழாய்களை மூடா மல் திறந்தநிலையிலேயே விட்டு விடுவதால் குழந்தைகள் அதில் விழுந்து இறந்து விடுகி றார்கள் என்ற செய்தி பரவலாக வந்த நிலை யில், பெம் பள்ளியில் அந்த இரு ஆழ்குழாய்க ளையும் மூடி விடுவதென பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. அப்போது பயன்படாத அந்த ஆழ்குழாய்களை வெறுமனே மூடிவிடுவ தற்கு பதிலாக பயனுள்ள முறையில் அதை பயன்படுத்த முடியுமா என்று மாற்று வழிமு றையை யோசித்தோம். அப்போது இரு ஆழ்குழாய்களிலும் மழைநீர் சேகரிப்பு ஏற் பாடு செய்்யலாமா? என எனக்கு சிந்தனை ஏற்பட்டது.
ஏற்கெனவே ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000 ஆம் ஆண்டில் மழைநீர் சேகரிப்பின் பயனாக பெரி யளவில் திருப்பூரில் மட்டுமில்லாமல் தமிழக அரசு வரை இச்செய்தி பரவியது. இந்திய அள வில் நடைபெற்ற தண்ணீர் கருத்தரங்கில் ஜெய்வாபாய் பள்ளி மாணவியை அழைத் துச் செல்லும் சிறப்பும் எனக்குக் கிட்டியது. இதனால் மழைநீர் சேகரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினேன். 2012 இல் பெம் பள்ளியில், தினமும் 20 ஆயிரம் லிட்டர் லாரி மூலம் தண்ணீர் வாங்கி னார்கள். புதுத் திருப்பூர் பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.5 லட்சம் டெபாசிட் செலுத்தி, 1000 லிட்டர் தண்ணீர் ரூ. 70 வீதம் தினந்தோறும் 20ஆயிரம் லிட்டர் வாங்க ஒப்பந்தம் போட் டோம். அந்த சமயத்தில்தான் கைவிடப்பட்ட ஆழ்குழாய்களில் மழைநீர் சேகரிக்கும் யோசனையும் எனக்கு உருவானது. எனவே பள்ளியில் இருந்த 2 ஆழ் குழாய்களிலும் மழை நீரை சேகரிக்க வேண்டும், அதே சமயம் குழந்தைகளும் விழாமல் பாதுகாப்பு செய்ய வேண்டும் என ஒரு எளிய கட்டமைப்பை ஏற் படுத்தினோம்.
கடந்த 9 ஆண்டு காலமாக இப்பள்ளி வளா கத்தில் பெய்த மழைநீர் எல்லாம், இந்த இரு மழைநீர் சேகரிப்பு ஆழ் குழாய்களிலும் சேக ரமாகும்படி செய்யப்பட்டது. இதன் பயனாக தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக, பெம் பள்ளியின் 60 அடி ஆழக் கிணற்றின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. இந்த கோடை காலத்திலும் கிணற்றில் 40 அடியில் தண்ணீர் இருக்கிறது. இதனால், தினந்தோ றும் 15ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகி றது. எனினும் கிணற்று நீர் குறையவில்லை. இந்த கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாமல் தாராளமாக கிடைக்கிறது என்ற நிலையில், ஏற்கெனவே புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தில் போடப்பட்ட ஒப்பந்த அளவான 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் என்ப தையும் தினம் 10 ஆயிரம் லிட்்டர் என குறைத் துள்ளோம். தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட ஆழ் குழாய்கள் ஏராளமாக உள்ளன. அவை முறை யாக மூடப்படாமல் விடப்படுவதால் குழந்தை கள் அதில் விழுந்து உயிரிழந்த சம்பவங்க ளும் கடந்த காலங்களில் நடந்துள்ளன. எனவே, அவற்றை ஒரு எளிய வடிவிலான மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றி, குழந் தைகள் விழாமலும் பாதுகாப்பு ஏற்பாடு செய் தால், மழைநீரை பெருமளவு சேகரிக்க முடி யும். நிலத்தடி நீர் மட்டமும் நன்றாக உய ரும். எனவே, பெம் பள்ளியில் கிடைத்தி ருக்கும் இந்த அனுபவத்தை தனியார்கள் மட் டுமின்றி அரசு சார்ந்த அமைப்புகளும் பயன் படுத்தி மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட் டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு ஆ.ஈசுவரன் தெரிவித்தார்.