districts

img

வீடு கட்ட ரூ.4 லட்சம்: முறைசாரா தொழிலாளர்கள் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 25- முறைசாராத் தொழிலாளர்க ளுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். ஓய்வூதி யத்தை முறையாக வழங்க வேண் டும் என வலியுறுத்தி திருப்பூரில் சிஐ டியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. முறைசாரா தொழிலாளர்கள் பணப்பலனுக்கு விண்ணப்பித்தோ ருக்கு உடனடியாக அதை வழங்க வேண்டும். மற்ற 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களுக்கு கட் டுமானத் தொழிலாளர் நலவாரியத் தில் வழங்குவது போல கல்வி, இயற்கை மரணம், விபத்து மரணம்  இழப்பீடு உள்ளிட்ட பணப் பலன் களை வழங்க வேண்டும்.  நலவாரிய அலுவலகங்களில் கூடுதல் பணியா ளர்கள் நியமித்து தொழிலாளர் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து  தீர்வு காண வேண்டும், அனைத்து நல வாரிய தொழிலாளர்களுக்கும் வீடு  கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பாக செவ்வா யன்று போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் பி.முத்து சாமி தலைமை வகித்தார். கட்டுமா னத் தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொதுச்செயலாளர் டி.குமார், மாவட்ட தலைவர் ஏ.ராஜன், சாலையோர வியா பாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பாலன், மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஒய்.அன்பு ஆகியோர் கோரிக்கைகளை வலியு றுத்தி உரையாற்றினர். இதில் சிஐ டியு மாவட்ட செயலாளர் கே.ரங்க ராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜ கோபால் மற்றும் அமைப்புசாராத் தொழில் சார்ந்த சங்கங்களின் நிர் வாகிகள், தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில் சிஐ டியு திருப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கச் செயலாளர் என்.சுப்பிரமணி யம் நன்றி கூறினார்.