கோவை, ஜன.28- தேவாலயத்தில் இருந்த செபாஸ்தியர் சிலை சேதப் படுத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை, ராமநாதபுரம் சந்திப்பு அருகில் ட்ரி னிட்டி தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலில் புனித செபாஸ்தியரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் திங்களன்று சேதப்படுத்தினர். இச்செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், கண்ட னம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த னர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கோவை வெள்ள லூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மதன்குமார் (23), ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் ஆகியோர் புதனன்று கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சதித் திட்டம் தீட்டுதல், சமூக அமைதியைக் குலைக்க முயற்சித்தல், அத்துமீறி நுழைதல் உள் ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக் குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், மதன்குமாரை சிறையிலும் அடைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மருதாச்சலமூர்த்தி, தீபக் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் வியாழ னன்று தீபக்கையும், வெள்ளி யன்று மருதாச்சலமூர்த்தியையும் போலீசார் கைது செயதனர்.