districts

img

இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேர் கைது - 12 வாகனங்கள் பறிமுதல்

தருமபுரி, மார்ச் 3- நல்லம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்களை திரு டிய 4 பேரை அதியமான் கோட்டை காவல் துறையினர் கைது  செய்தனர். தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை ஏ.ஜெட்டி அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (54). இவர் கடந்த பிப்.27 ஆம் தேதி தருமபுரி அரசு கலைக்கல்லூரி எதிரில்  தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்த்தபோது அவரது வாகனத்தை காண வில்லை. அதேபோல், ஏலகிரி அருகே உள்ள கொத்தமல்லி காரன் கொட்டாயை சேர்ந்தவர் பழனிசாமி (36). இவர் குடிப் பட்டி தக்காளி மண்டி அருகில் தனது இருச்சக்கர வாக னத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம் காணாதது கண்டு திடுக் கிட்டார். இதையடுத்து இருவரும் அதியமான்கோட்டை  காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து வழக் குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வந்தனர்.  இந்நிலையில், புதனன்று காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் தடங்கம் மேம்பாலம் அருகில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டையை சேர்ந்த அர்ச்சுனன் (29), சிக்க பூவர்த்தியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (23), தருமபுரி மாவட்டம், குரும்பட் டியை சேர்ந்த லோகேஷ்வரன் (19), குப்பாகவுண்டர் தெருவை சேர்ந்த சுரேந்தர் (19) ஆகிய நால்வரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இவர்கள் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிட மிருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 12 இருசக்கர வாக னங்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.