districts

3 ஆவது நாளாக காட்டுயானையை தேடும் பணி தீவிரம்

ஈரோடு, அக்.15- பொதுமக்களை அச்சுறுத்தி வரும் பார்வை குறைந்த காட்டுயானையை 3  ஆவது நாளாக தேடும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம் பட்டியை அடுத்த விளமூண்டி வனச்சர கத்திற்குட்பட்ட அய்யம்பாளையம் பகு தியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வை குறைந்த ஒற்றை காட்டுயானை கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது விவசாயிகள் பயிரிட்டு வந்த விளை  நிலங்களிலிருந்த வாழை மரங்களை  சேதப்படுத்தியும் மற்றும் வனத்துறையி னர் வாகனத்தையும், வீடுகளையும், தண் ணீர் குழாய்களையும், கம்பி வேலிக ளையும் சேதப்படுத்தி சென்றது. எனவே, அந்த ஒற்றை காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து வனத்துறையி னர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கபில்தேவ் மற்றும் முத்து என்ற 2 கும்கி யானைகள் வரவழைத்தனர். மேலும், பொதுமக்களை அச்சுறுத்தி சென்று வனப்பகுதிக்குள் சுற்றி வரும்  ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற் காக வன அதிகாரிகள் உட்பட 15 பேர்  கொண்ட வனத்துறையினர் குழுக்க ளாக இணைந்து சென்று 2 நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இதுவரை அந்த ஒற்றை காட்டு யானை  வனத்துறையினர்கள் பார்வையில் தட் டுப்படவில்லை.  தொடர்ந்து ஞாயிறன்று 3 ஆவது நாளாக வனப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் காட்டுயானை எங்கு உள்ளது என கண்காணித்து தேடும் பணியில் ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் தலைமையில் 15 பேர் கொண்ட வனத்துறையினர் குழுக் களாக பிரிந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி, காட்டு யானையை பார்த்தவு டன் கும்கி யானைகளுடன் சென்று மயக்க ஊசி செலுத்தி பிடித்து கும்கி யானைகளின் உதவியுடன் ஆனை மலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.