திருப்பூர், செப். 12 - திருப்பூர் மாநகராட்சி கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3,390 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். அத்துடன் மாணாக்கர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகளை அமைச்சர் மற்றும் மேயர் ஓட்டிப் பார்த்து பரிசோதித்தனர். இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 14,143 மாணவ, மாணவி யர்களுக்கு ரூ.6.81 கோடி மதிப்பீட்டில் மிதி வண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது வரை 13,964 மதிவண்டிகள் வழங் கப்பட்டுள்ளன. சென்னையில் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து விரி வான விசாரணை மேற்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பவனவர் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.