districts

img

பொய் வழக்கிலிருந்து 32 பேர் விடுதலை

சேலம், ஜூன் 5- மக்கள் இயக்கத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 32 பேர் மீது பொய் வழக்கு போலீசார் போட்ட நிலை யில், மூன்று வருடங்களுக்கு பிறகு மார்க்சிஸ்ட் கட்சியினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு சூரமங்கலம் துணை ஆணை யளர் நாகராஜின் மக்கள் விரோத நடவடிக்கையை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, மார்க் சிஸ்ட் கட்சியின் சேலம் மேற்கு மாநகர செயலாளர் எம்.கனக ராஜ் உட்பட்ட 32 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கினை ஜேஎம்.2. நீதிமன்றத்தில்  2022 டிசம்பர் மாதம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இதற்கான தீர்ப்பை திங்களன்று வழங்கப்பட்டது. இதில், காவல் துறையினரால் புனையப்பட்ட பொய் வழக்கு என்று கூறி  அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கில் திறம் பட வாதாடி விடுதலை வாங்கி தந்த வழக்கறிஞர் பகத் சிங்க்கு அனைவரும் நன்றியும், வாழ்த்துகளையும் தெரி வித்தனர்.