districts

விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.32 லட்சம் இழப்பீடு காப்பீட்டு நிறுவனத்திற்கு நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல், பிப்.6- இரண்டு வெவ்வேறு வழக்குகளில் விபத் தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.32 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள வெண்ணங்கல் காடு  கிராமத் தில் வசிப்பவர் சுப்ரமணியம். இவரது மகன்  தமிழ்ச்செல்வன் கல்லூரிக்கு சென்று திரும் பும் வழியில், கடந்த 2019 ஜூன்  மாதத்தில்  இரு சக்கர வாகனத்தில் விபத்துக்குள்ளாகி  இறந்துவிட்டார்.  வாகன உரிமையாளர் வாக னத்தை ஓட்டும் போது விபத்துக்குள்ளாகி இறந்தால் தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டப் படி ரூ.15 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் காப் பீட்டை தனியார் நிறுவனம் ஒன்றில் தமிழ்ச் செல்வன் பெற்று இருந்தார்.  காப்பீட்டின் படி பணம் வழங்குமாறு இறந்து போனவரின் தாயார் ரேவதி இன்சூ ரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பம் செய்தார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் பணமோ பதிலோ வழங்கவில்லை.  இத னால் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அவரும் இறந்து விட்டதால், அவ ரது கணவர் சின்னமுத்து வழக்கை நடத்தி  வந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில்,   நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி பதி வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். இதில், வழக்கில் இன்சூரன்ஸ் மூலம் கப் பீட்டை பெற்ற தமிழ்ச்செல்வன் இறந்தது  குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.  தங்களிடம் இன்சூரன்ஸ் பணம் கேட்டு விண்ணப்பம் செய்யப்படவில்லை என்று  நீதிமன்றத்தில் வாதிட்டனர்.  இன்சூ ரன்ஸ் பணத்தை தருமாறு வழக்கு தாக்கல்  செய்தவர் கேட்டதற்கு தகுந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் பின்னரும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியுள்ளார். வழக்கறிஞர் அறிவிப்பை பெற்ற பின்னர் கூட பணத்தை பெறுவதற்கான விண்ணப்ப  படிவத்தையும் என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகின்றன என்ற பட்டியலையும் இன்சூரன்ஸ் நிறுவனம் அனுப்பி வைக்க வில்லை. இதன் மூலம் இன்சூரன்ஸ் மூலம்  சேவை குறைபாடு புரிந்துள்ளது என்று தீர்ப் பில் கூறப்பட்டுள்ளது. மேலும், நான்கு வார காலத்துக்குள் தனி நபர் விபத்து காப்பீட்டு விபத்து தொகையான ரூ.15 லட்சமும், இழப் பீடாக ரூபாய் ஒரு லட்சமும் விபத்து நடந்த  நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை  ஆண்டுக்கு 9 சதவீத வட்டியும் இன்சூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதே போலவே, சின்னன்னம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த 2020 ஜனவரி மாதத்தில் அவரது    தந்தைக்கு சொந்தமான காரை ஆந்திர பிரதே சத்தில் ஓட்டி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார்.  இறந்தவ ரின் தந்தை பழனிச்சாமி தனிநபர்   விபத்து  காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவ னத்தில் இன்சூரன்ஸ் செய்திருந்தார். இதன் படி அவருக்கு ரூ.15 லட்சத்தை வழங்கு மாறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கேட்டதில்  உரிமையாளரே வாகனத்தை ஓட்டிச் சென்று  இறந்தால்தான் காப்பீட்டுத் தொகை கொடுக்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவ னம்   பணத்தை தர மறுத்து விட்டது. இதனால்  இறந்து போன சதீஷ்குமாரின் மனைவி சந் தியா, குழந்தைகள் சௌமித், செல்வி   ஆகி யோர் மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கில் திங்களன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் இறந்து  போன சதீஷ்குமார் மனைவிக்கும் இரண்டு  குழந்தைகளுக்கும் நான்கு வார காலத்துக் குள் தனி நபர் விபத்து காப்பீட்டு விபத்து காப் பீட்டு தொகை ரூ.15 லட்சமும் இழப்பீடாக ஒரு  லட்சம் ரூபாயும் விபத்து நடந்த நாளிலி ருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை  ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியும் இன்சூ ரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது.