திருப்பூர், ஜன.27- ஊத்துக்குளி வட்டாரத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்த முக்கிய தலைவர் களில் ஒருவரான மூத்த தோழர் சாலப் பாளையம் எஸ்.பி.கந்தசாமியின் 31ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று எழுச்சி யுடன் கடைப்பிடிக்கப்பட்டது. சாலப்பாளையம் எஸ்.பி.கே. நினைவி டத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச் சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் கட்சி கொடி யேற்றி வைத்தார். மாநிலக் குழு உறுப்பி னர் கே.காமராஜ், திருப்பூர் மாவட்ட செயலா ளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார் கள். பின்பு நடைபெற்ற பேரவை கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் உரையாற்றினார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத் துக்குளி தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன் மற்றும் ஊத்துக்குளி தாலுக்கா குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி கிளைச் செயலாளர்கள், வர்க்க வெகுஜன அமைப்பின் நிர்வாகிகள், தோழர்கள் திர ளாக கலந்து கொண்டனர். முடிவில், கட்சி யின் மாவட்ட குழு உறுப்பினர் கு.சரஸ் வதி நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் ஊத்துக்குளி நகரம், ஆர். எஸ் மற்றும் மாதர், கருமாண்டக்கவுண் டனூர், புதுப்பாளையம், சாலப்பாளையம், குன்னம்பாளையம், பல்லகவுண்டன் பாளையம் மாதர் கிளைகளின் சார்பில் கட்சி நிதியாக ரூபாய் 65 ஆயிரத்து 570 வழங்கப் பட்டது.