districts

img

குன்னூரில் 30 செ.மீ. மழை: மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

உதகை, டிச.14- நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு  பருவமழை தீவிரமடைந்துள்ள நிலை யில், குன்னூரில் 30 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் சாலை  மற்றும் தண்டவாளத்தில் மண் சரிவு  மற்றும் மரங்கள் விழுந்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக் டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. ஆனால், ஒரு மாதமாகியும் பெரிய அளவில் மழை இல்லாமல் பனியின் பாதிப்பு அதிக ளவு இருந்தது. இந்நிலையில், செவ் வாயன்று மாலை நீலகிரி மாவட்டத் தில் கடும் மழை பெய்ய துவங்கி யது. குன்னூரில் மட்டும் அதிகபட்ச மாக 30 சென்டிமீட்டர் மழை பதிவா னது. குறிப்பாக குன்னூர் சுற்றுவட் டார பகுதிகளான பர்லியார், அரு வங்காடு, வண்டிச்சோலை போன்ற பகுதிகளில் மழை கொட்டியது. குன் னூரில் நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் பாதிக் கப்பட்டன. குறிப்பாக உதகை – குன் னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் 3, எல்லநல்லி யில் 3, இந்திரா நகரில் ஒன்று என மொத்தம் 13  இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. பிருந்தாவன் பள்ளி பகுதி, அருவங்காடு பால்கார லைன், இந்திரா நகர், வண்டிச்சோலை உள் ளிட்ட 10 இடங்களில் மரங்கள் விழுந் தன.

குன்னூரில் பெய்த கனமழை கார ணமாக பல்வேறு பகுதிகளில் குடி யிருப்பிற்குள் தண்ணீர் புகுந்து வீடு கள் சேதமடைந்தது. உழவர் சந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்று பாரத் நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்ததில் 5 இடங் களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமானது. மேலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் கிராமமக்கள் தண்ணீரை வெளியேற்றி வீட்டிலி ருந்தவர்களை பாதுகாப்பான இடத் திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வருவாய் கோட் டாட்சியர் பூஷ்ணகுமார், குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 3 வருவாய் ஆய்வா ளர்கள், 15 கிராம நிர்வாக அதிகாரி கள் தலைமையில் வருவாய்த்துறை யினரும், குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் 25 தீயணைப்பு துறையினர் மற்றும்  நெடுஞ்சாலை துறையினர் நகராட்சி நிர்வாகத்தினர் மீட்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

மலை ரயில் ரத்து

மேலும், உதகையிருந்து மேட் டுப்பாளையம் வரை உள்ள மலை ரயில் பாதையில் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அவற்றை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் புதனன்று மலை ரயில் போக்கு வரத்து முழுவதுமாக ரத்து செய்யப் பட்டது. இந்த மழை காரணமாக செவ் வாய், புதனன்று வாகன போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட் டது. உதகையிலிருந்து கோவை உட் பட தமிழகம் முழுவதும் சென்ற வாக னங்கள், அரசு பேருந்துகள் ஊர்ந்த வாறு சாலையில் சென்றன. பர்லியார் பகுதியில் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் இரவு 10 மணி முதல் காலை 6 மணி  வரை பர்லியார் பகுதியில் வாகனங் கள் அனுமதி மறுக்கப்பட்டு கோத்த கிரி சாலை வழியாக திருப்பி விடப் பட்டன. இதன்பின் போலீசார் நெரி சலை சரி செய்த பின்னர் போக்கு வரத்து சீரானது.