இசை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி மோசடி
உதகை, பிப்.18- உதகையில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ஆன் லைனில் டிக்கெட் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் திரு மணத்திற்காக இரு தினங்கள் உதகை கூட்செட் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பதிவு செய்யப் பட்டது. இதையொட்டி 2 நாட்களில் அந்த தனியார் மண்ட பத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறி ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை கடந்து சில நாட்களாக நடை பெற்று வந்துள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்பனை செய்யும் சம்பவம் திருமண வீட்டாருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள். இது குறித்து, மண்டப நிர்வாகத் திடம் முறையிட்டனர். ஆனால் திருமணத்திற்கு மட்டும் தான் மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இசை நிகழ்ச்சி குறித்து தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் மண்டப நிர்வாகத்தினர் தெரிவித்துவிட்டனர். ஆனா லும் மண்டபத்தின் பெயரை கூறி மோசடி சம்பவம் நடை பெறுவதால் அவர்களை பிடிக்க முடிவு செய்தனர். இதன்படி ஆன்லைன் டிக்கெட்டில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மொத்தமாக 20 டிக்கெட் தேவைப்படுவதாக கூறினர். எத்தனை டிக்கெட் வேண்டு மானாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர்கள் பதில் அளித்து உள்ளனர். ஆனால் ஆன் லைனில் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடிய வில்லை என்றும் நேரில் வந்து டிக்கெட்டுகள் கொடுத்தால் பணத்தை கொடுத்து விடுவதாகவும் மண்டப நிர்வாகத் தினர் தெரிவித்து உள்ளனர். இதை நம்பி உதகைக்கு நேரில் வந்த அக்கும்பலை மண்டப நிர்வாகத்தினர் மடக்கிப் பிடித்தனர். மேலும் மண்டப நிர்வாகி சதீஷ், உதகை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் மீனா பிரியா தலைமை யிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆன்லைன் மூலம் ஒரு டிக்கெட் ரூ.500 வீதம் இதுவரை 2000 டிக்கெட் விற்பனை செய்துள்ளதாக தெரிய வந் துள்ளது. இம்மோசடியில் ஈடுபட்ட உதகையை சேர்ந்த சித்தார்த் (24), சரவணன் ரூகேஷ் பாபு (35), ஜாக்சன் (30), மோனிஷ் குமார் (20) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கார் மற்றும் இருசக்கர வாக னம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னர் நீதி மன்றத்தின் முன்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது 34.4 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
கோவை, பிப்.18- கோவை, துடியலூர் பகுதியில் தொடர் வீடு புகுந்து திருட் டில் ஈடுபட்டு வந்த நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 34 பவுன் தங்க நகைகளை மீட்டனர். துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை செய்தும் தேடுதல் நடவ டிக்கையில், ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் காவல்துறை யினர் தொப்பம்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபர்களை விசாரணை செய்ததில் துடியலூர் பகுதிகளில் வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்தவர்கள் என தெரிய வந்தது. இதில், கோவில்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்ற திவான் (20), அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (55) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் (31) ஆகிய மூன்று நபர்கள் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் இந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிட மிருந்து 34.4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய் தனர்.
ரயில் மோதி தம்பதி தற்கொலை?
கோவை, பிப்.18- கோவை அருகே, தம்பதியினர் ரயில் மோதி பலியாகி னர். இது தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை – கணபதி, நல்லாம்பாளையம் ரங்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (44). கார் ஓட்டுநர். இவரது மனைவி லதா (43). இவர்கள் 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவி இருவருமே உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரி கிறது. மேலும் போதிய வருமானம் இல்லாததால் தங்களது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து வேதனையடைந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மணிகண்டன், அவரது மனைவி லதாவுடன் பீளமேடு - வடகோவை ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை - கோவை இன்டர்சிட்டி ரயில் அவர்கள் மீது மோதியது. இதில், தலை நசுங்கி கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஞ்ஜின் ஓட்டுநர் உடனடியாக கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறை ஆய்வாளர் மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தார் களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதி தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி
சேலம், பிப்.18- வெளிநாட்டில் வேலை வாங்கி தருதாக கூறி மோசடி செய்யப்பட்ட நிறுவனம் முன்பு இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் 5 ரோடு அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கும் நிறுவனம் செயல்படுகிறது. வெள்ளியன்று காலையில் அந்த நிறுவனத்தை சேலம், தருமபுரி, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத் ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினர். விசாரணையில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் விளம்பர செய்தனர். இதற்காக முன் பண மாக ரூ.50 ஆயிரத்தை பல பேரிடம் பெற் றனர். இந்நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுதொடர் பாக அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்க வில்லை. இதனிடையே வேலை வாங்கி கொடுக்க முடியாததால் பணம் திரும்ப வழங் கப்படுகிறது என்ற குறுந்தகவல் அந்த நிறு வனம் மூலம் வந்தது. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் சேலத்திற்கு வந்திருந்தனர். ஆனால், அந்த நிறுவனம் பூட்டி கிடந்ததால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து அவர்களிடம் இந்த மோசடி தொடர் பாக சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கும்படி அறிவு றுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் அனை வரும் அங்கு சென்றனர். அப்போது அங் கிருந்த போலீசார் அவர்களிடம், அந்த நிறு வனத்தில் பணம் கட்டி ஏமாந்தற்கான தகுந்த ஆவணங்களுடன் புகார் கொடுக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று புகார் எழுதி கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரும்பு விவசாயிகள் மீதான வழக்கு தள்ளுபடி
ஈரோடு, பிப்.18- ஈரோடு மாவட்டத்தில் கரும்பு விவசாயி கள் சங்க நிர்வாகிகள் மீது பதியப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 2013-14 முதல் 2016-17 வரை நான்கு ஆண்டுகள் தமிழ்நாடு அரசு பரிந்துரை விலையை அறி வித்தது. எஸ்ஏபி எனப்படும் மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை தனியார் சர்க்கரை ஆலை நிர்வா கங்கள் வழங்க முன்வரவில்லை. இதனை எதிர்த்து மாநில அரசின் பரிந்துரை விலையை வழங்கிடக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் சர்க் கரை ஆலை முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி காவல் துறைக்கும் அனுமதி கேட்டு கடிதம் கொடுக் கப்பட்டது. ஆனால், தீர்மானிக்கப்பட்டபடி விவசாயிகளுடன் சத்தியமங்கலம் பண் ணாரி அம்மன் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திட சென்ற கரும்பு விவ சாயிகளை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். 143, 188 பிரிவுகளின் கீழ் 16 விவசாயிகள் மீது அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய் தனர். இந்த வழக்கு சத்தியமங்கலம் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 2018 ஆண்டிலிருந்து நடைபெற்ற இவ்வழக்கின் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஆலை மட்ட கிளையின் தலைவர் ஏ.ஆர். சுப்பையன், எஸ்.முத்துசாமி, கே.எம்.விஜய குமார், விவேகானந்தன், கே.சுப்ரமணி, சின்னசாமி, ஈஸ்வரன், பழனிச்சாமி உட் பட 16 விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை நீதிபதி சனியன்று தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.
பந்தலூரில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
உதகை, பிப்.18- பந்தலூரில் நீதிமன்றம் கட்டிடம் கட்டுவ தற்கான இடத்தை உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம், பந்தலூர் நெல்லி யாளம் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத் தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இதனால், புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது. இதனையடுத்து, விளையாட்டு மைதானம் அருகே நீதிமன்ற கட்டிடம் கட்ட நீதித்துறையும், வருவாய்த் துறையும் இடத்தை தேர்வு செய்திருந்தன. விளையாட்டு மைதானத்தையொட்டி நீதி மன்ற கட்டிடம் கட்ட கூடாது என்றும், வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பந்தலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, அட்டி செல்லும் சாலை யில் அய்யப்பன் கோவில் அருகே வரு வாய்த்துறைக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர் நடேசன், காவல்துறை ஆய் வாளர்கள் அமுதா, சித்ரா திருஞான சம்பந்தம், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு
கோவை, பிப்.18- கோடை வெயில் துவங்குவதற்கு முன்பே பொள்ளாச்சி இளநீர் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் தென்னை விவசாயமே பிரதான மாகும். இங்கு விளையும் இளநீரை மகாராஷ்ரா, கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதிகளவு இளநீர் அனுப்பப்படுகிறது. இதில் செவ்விளநீரே அதிகளவு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக் கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு ஆண்டுகளில் 15.85 லட்சம் மரக்கன்றுகள்!
திருப்பூர், பிப்.18- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த எட்டு ஆண் டுகளில் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் மூலம் 15 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவாக வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பினர் திருப்பூர் மாவட்டத்தை பசுமை பகுதியாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் மரக்கன்றுகள் நடும் இயக்கத் தைத் தொடங்கினர். கடந்த 2015ஆம் ஆண்டு வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினர் முதல் கட்டமாக 1 லட்சத்து 35 ஆயிரம் மரக்கன்று கள் நட்டனர். 2016ஆம் ஆண்டு 2 லட்சதது 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. 2017ஆம் ஆண்டு 1 லட்சத்து 55 ஆயிரம் மரக்கன்று கள் நடப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஒன்றரை லட்சம் மரக்கன்றுகளும், 2019ஆம் ஆண்டு 1 லட்சத்து 35 ஆயிரம் மரக்கன்றுகளும், 2020 ஆம் ஆண்டு இரண்டரை லட்சம் மரக்கன்று களும், 2021ஆம் ஆண்டு 2 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகளும், 2022 ஆம் ஆண்டு அதிக பட்சமாக இரண்டே முக்கால் லட்சம் மரக்கன் றுகளும் நடப்பட்டுள்ளன. எட்டு ஆண்டு காலத்தில் மொத்தம் 15 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட் டுள்ளன. திருப்பூர் மாநகரம் மட்டுமின்றி, நக ராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் மாணவ, மாணவி யர், தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள், குடியிருப்போர் சங்கத்தினர் என சமூ கத்தின் பல்வேறு தரப்பினரின் பங்கேற்போ டும் இந்த இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. எண் ணிக்கைக்காக மரக்கன்றுகளை நடுவது என்று இல்லாமல் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து அவற்றை வளர்த்து மரங்களாக நிலைத்து நிற்கும் வகையில் இயக்கம் முன் னெடுக்கப்பட்டது. வேம்பு, புங்கன், தேக்கு, சவுக்கு, மா, பனை, கொய்யா, இலந்தை, எலுமிச்சை, கருங்காலி, வில்வம் என 90 வகையான மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. இது பன்மைத் துவத்துடன் மரக்கன்றுகள் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கக்கூடிய விசயமாக உள்ளது. வனத்துக்குள் திருப்பூர் இயக்கத்தை முன்னெடுத்த வெற்றி அமைப்பின் சார்பில் எட்டாம் ஆண்டு நிறைவு விழா ஞாயிறன்று மாலை திருப்பூர் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடத்தப்படுகிறது. இதில் கால நிலை மாற்றமும் – தொழில் சூழ்நிலை யும் என்ற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், மலையும், மழை யும் என்ற தலைப்பில் தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினர் ஓசை காளிதாசன் ஆகி யோர் உரையாற்றுகின்றனர். இதில் மதுரை தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் சு. வெங்கடேசன் இயற்கையும், இலக்கியமும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார்.
திருப்பூர் நெருக்கடியை அரசுக்கு உணர்த்த தொழில் கூட்டமைப்பை உருவாக்க யோசனை
திருப்பூர், பிப்.18- திருப்பூர் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் சந்தித்து வரும் நெருக்கடி பல லட் சக்கணக்கான மக்களுக்கு பாதிப்பை ஏற்ப டுத்தும் என்பதால், அனைத்து தொழில் கூட்ட மைப்பை உருவாக்கி, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என திருப்பூர் ஏற் றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம் யோசனை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் சனியன்று வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு: திருப்பூர் பின்ன லாடை தொழில் 90 சதவீதம் சிறு, குறு, நடுத்தர பிரிவை சார்ந்தவை. அதை நம்பி நூற்பாலை, பேப்ரிகேஷன், டையிங், காம் பேட்டிங், பிரிண்டிங், எம்பிராய்டிங், காஜா பட் டன், தையல் நூல், ரைசிங், டிரான்ஸ்போர்ட் வர்த்தகம் என லட்சக்கணக்கான தொழிலா ளர்கள், 90 சதவீதம் உற்பத்தியாளர்களை நம் பியுள்ளது. இந்த பாதிப்பு ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியாளருக்கு ஆனது. இன்று உற்பத்தி யாளர்கள் நாளை அதை நம்பியுள்ள நூற்பா லைகள் முதல் ட்ரான்ஸ்போர்ட் வரை லட்சக்க ணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் 100% பாதிப்புக்கு உள்ளாகும். இந்த நிலையை மாநில அரசுக்கும், மத்திய அரசுக் கும் தெரியப்படுத்தும் வகையில் ஒரு கூட்ட மைப்பை உருவாக்குவோம். அதன் வாயி லாக மாநில அரசு, மத்திய அரசை சந்திக்க வேண்டும். இது போர்க்கால அடிப்படை யில் நாம் அனைவரும் ஒன்று இணைவோம், ஒன்றிணைந்து நம் தேவைகளை கண்டறிந்து அரசை வலியுறுத்த வேண்டிய தருவாயில் உள்ளோம். அதற்கு உண்டான தேதிகளை விரைவில் அறிவிக்கிறோம் என்று டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறி இருக் கிறார்.
உரிமம் பெறாமல் விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை
தாராபுரம், பிப்.18 - தாராபுரம், மூலனூர், குண்டடம் பகுதிக ளில் சோளம், மக்காச்சோளம், கம்பு, நிலக்க டலை, உளுந்து, பாசிபயறு, தட்டைபயறு, கொள்ளு மற்றும் காய்கறி விதைகளை உரி மம் பெறாமல் விற்றால், விதை விற்பனை செய்த உரிமையாளர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் பெ.சுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர், குண்டடம் வட்டாரத்தில் விதை விற்பனை உரி மம் பெற்ற 198 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. உரியம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, நிலக் கடலை, உளுந்து, பாசிபயறு, தட்டைபயறு, கொள்ளு, சூரியகாந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விவசாயிகள் விதைகளை வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனை பட்டியலில் நாள், இரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டு தருமாறு கோரி, விதை வாங்குபவரின் கையொப்பம் இட்ட விற் பனை பட்டியல் பெறப்படவேண்டும். மேலும் விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண் டிகளில் விதைகளை வாங்க வேண்டாம் என அறிவுரை வழங்கினார். மேலும் விதை உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுக் கள் விற்பது சட்டபடி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகளை விற்ற நிறுவ னத்தின் மீது விதைகள் சட்டத்தின்படி நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித் துள்ளார்.
மக்கும் குப்பை, மக்காத குப்பை
தாராபுரம், பிப்.18- திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் மடத்துக்குளம், ஓட்டம டம் தனியார் பள்ளி சார்பில் தாராபுரம் காவல் துறையுடன் இணைந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து சேகரிப் பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துண் டுபிரசுரங்கள் வழங்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி பங்கேற்றனர். பள்ளி பயிற்சி உதவி ஆய்வாளர் தமிழ்ராஜ் கொடியை அசைத்து பேரணியை துவங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். தாராபுரம் பூக்கடை வீதி யில் இருந்து துவங்கிய பேரணி வசந்தா ரோடு, சிஎஸ்ஐ வளா கம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி சாலை வழியாக பொள் ளாச்சி அமராவதி ரவுண்டானாவில் நிறைவடைந்தது. அமரா வதி ரவுண்டானா பகுதியில் சாலையில் நடந்து வந்து கொண் டிருந்தவர்களுக்கு பள்ளி மாணவ, மாணவர்கள் மரக்கன் றுகள் மற்றும் விதை பந்துகள் வழங்கி மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடத்தில் வழங்குவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:43.94/60அடி நீர்வரத்து:822கனஅடி வெளியேற்றம்:242கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:63.78/90அடி.நீர்வரத்து:43கனஅடி வெளியேற்றம்:316கனஅடி