கோவை, பிப். 13- கோவையில் கொள்ளை யடிப்பதற்காக நோட்டமிட்டு கைத்துப்பாக்கி மற்றும் அரி வாளுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை உக்கடம் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட் டிருந்தனர். அப்போது லங்கா கார்னர் ரயில்வே பாலம் அருகே சந்தேகத்திகு இடமான வகையில், 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், மேலும் சந்தேகம டைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்தனர். அதில், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு அரிவாள் இருந்தது. மேற் கொண்டு போலீசார் அவர் களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக் கையில், அவர்கள் 3 பேரும் கொள்ளையடிக்கும் நோக் கில் சுற்றியதும், அதற்காக நோட்டமிட்டு வந்தபோது போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீ சார் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த தொழிலாளி அஜித் குமார்(28), கடலூர் சிதம் பரத்தை சேர்ந்த தற்போது கோவையில் கார் ஓட்டுந ராக உள்ள சந்திரசேகர் (37) மற்றும் கோவை உப்பிலி பாளையம் வரதராஜபு ரத்தை சேர்ந்த கவுதம் (28) ஆகிய 3 பேரை கைது செய்த னர். அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு குண்டு ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கும்பலுடன் தொடர்பு டையவர்கள் யார்? இவர்க ளுக்கு ஏற்கனவே ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என உக்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.