இளம்பிள்ளை, பிப்.20- காக்காபாளையம் அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், காக்காபாளையம் அருகே பழைய தறி பட்டறை கட்டிடம் இடிக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 20 அடி உயரம் கொண்ட சுவர் தீடீரென இடித்து விழுந்ததில் மூன்று தொழிலாளர் கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அரு கிலிருந்த பொதுமக்கள் இடுபாடுகளில் சிக்கிய மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீரகாபாடி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.