சேலம், ஜன.10- மேச்சேரியில் புதனன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடி அள விற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், மேச்சேரியில் வாரந்தோறும் புதனன்று கூடும் ஆட் டுச்சந்தை பிரபலமானது. இந்த சந் தைக்கு மேச்சேரி சுற்று வட்டார பகுதி களில் இருந்தும், ஓமலூர், கொளத்தூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இருந் தும் ஆடுகளை விவசாயிகள் விற்ப னைக்கு கொண்டு வருகின்றனர். இப் பகுதிகளில் வளரும் ஆடுகள் வனப் பகுதிகளில் ஒட்டிய மேய்ச்சல் தரைக ளில் மேய்ந்து வருவதால் இறைச்சி சுவையாக இருக்கும். அதனால், மேச் சேரி சந்தை ஆடுகளை வாங்குவதற் கென்றே ஒரு கூட்டம் உள்ளது. தைப்பொங்கல் பண்டிக்கைக்கு சில நாள்களே இருப்பதால், புதனன்று மேச் சேரி ஆட்டுச்சந்தைக்கு விவசாயிகள் பண்டிகை செலவினத்திற்காக ஏராள மான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகள் வரத்து அதிகரித்தா லும் விலை சரியவில்லை. மாறாக கடந்த வாரத்தை காட்டிலும் புதனன்று ஒரு ஆட்டிற்கு ரூ.1500 முதல் ரூ.2000 வரை அதிகரித்து விலை போனது. கடந்த வாரம் ரூ.8 ஆயிரத்திற்கு விலை போன ஆடு, புதனன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. பண்டிகை நெருங்கியுள்ளதால் ஆடுக ளின் விலை மேலும் அதிகரிக்கும் என்று ஏராளமான முன்கூட்டியே ஆடுகளை வாங்க வந்து குவிந்தனர். ஆடுகள் விலை உயர்ந்த காரணத்தால் விவசாயி கள் மகிழ்ச்சியடைந்தனர். வெள்ளாடுகளும், செம்மறி ஆடுக ளும் சுமார் 3,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சுமார் 30 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடு ரூ.28 ஆயிரம் வரை விற்பனையானது. மேச் சேரி ஆட்டுச்சந்தையில் காலை 8.30 மணி வரை ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரி வித்துள்ளனர்.