உதகை, ஜூலை 28- நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 879 நாய் களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை நகரம் உருவாகி 200 ஆண்டு கள் ஆகிவிட்டது. எனவே, இதை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி களை நடத்தவும், சுற்றுலாவை மேம் படுத்தவும் மாநில பட்ஜெட்டில் ரூ.10 கோடியை சிறப்பு நிதியாக தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. சர்வதேச புகழ் வாய்ந்த உதகை உருவாகி இவ்வ ளவு ஆண்டுகள் ஆனாலும், சர்வ சாதாரணமாக உதகையின் புகழ் சறுக் கும் வகையில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் இதுவரை தீர்வு காணா மல் உள்ளன. இதில், நீலகிரி மாவட்டம் முழு வதும் உள்ள மிகப்பெரிய பிரச்சனை யாக தெரு நாய்கள் தொல்லை உள் ளது. காலையில் நடை பயிற்சி செய் பவர்கள் இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்புபவர்கள் என பல தரப்பின ரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நீலகிரியை பொருத்தவரை தெரு நாய் கடிக்கு மட்டும் அரசு மருத்துவம னைகளில் மாதந்தோறும் 100 பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இவற்றை முறையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது நீல கிரி மாவட்டத்தில் உதகை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தெருநாய் களை பிடித்து கருத்தடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கிறது. உதகையில் புதனன்று ஒரே நாளில் 16 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து உதகை நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உதகை நகராட்சியில் மட்டும் சுமார் 1000 நாய் கள் இருப்பதாக கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இதில் கடந்த பிப்ரவரி மாத முதல் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உதகை நகராட்சியில் கடந்த 6 மாதத்தில் தற்போது வரை 26 நாய்களுக்கு கருத்தடை செய்யப் பட்டு உள்ளது. அதேபோல் இதற்கு முன்னர் ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய ரூ.740 செலவு தொகையாக வழங்கப்பட்ட வந்த நிலையில், தற் போது அது ரூ.1040 ஆக அதிகரிக்கப் பட்டு உள்ளது. தொண்டு நிறுவனம் மூலம் தான் நாய்க்கு கருத்தடை செய் யும் பணிகள் நடந்து வருகிறது நீல கிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் இதுவரை 3879 நாய்களுக்கு கருத் தடை செய்யப்பட்டுள்ளது. நாய் களை எந்த இடத்தில் பிடிக்கப்பட் டதோ மீண்டும் அதே இடத்தில் விட உத்தரவிடப்பட்டுள்ளது, என்றனர். இதனிடையே தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் தொகையை உள்ளாட்சி நிர்வாகங்கள் தாமதப் படுத்துவதால் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, உள்ளாட்சி நிர் வாகங்கள் தாமதப்படுத்தாமல் இந்த தொகையை தொண்டு நிறுவனங்க ளுக்கு உடனடியாக வழங்க வேண் டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியு றுத்தியுள்ளனர்.