சேலம், செப்.11- ஆத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை கொலை செய்து, 10 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம், ஆலமர பேருந்து நிறுத்தம் பகு தியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் கோபால்சாமி. இவரது மனைவி அற்புதம் மாள் (88). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில், மகன் கடந்த 20 ஆண்டு களுக்கு முன்பும், கோபால்சாமி கடந்த ஒன் றரை ஆண்டுகளுக்கு முன்பும் உடல்நலக் குறைவால் இறந்துள்ளனர். இந்நிலையில், அற்புதம்மாள் வீட்டில் தனியாக இருந்துள் ளார். வழக்கம்போல் ஞாயிறன்று இரவு அக் கம்பக்கத்தினரிடம் பேசிவிட்டு, உறங்கச் சென்ற அற்புதம்மாள், திங்களன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அப்போது பால்காரர் கதவை திறந்து பார்த்த போது அற்புதம்மாள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் அப் பகுதியில் விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டி தனியாக இருந்ததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், ஞாயிறன்று இரவு ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் மூதாட்டியை கொலை செய்துள்ளனர். மேலும், அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள் ளது தெரியவந்தது. இதனிடையே ஈரோடு மாவட்டம், சென் னிமலை பகுதியில் சனியன்று அடையாளம் தெரியாத நபர்கள், வயதான தம்பதியை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென் றுள்ளனர். அதேபோல், சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக தங்கி யிருந்த மூதாட்டியை கொலை செய்து, வீட்டிலிருந்து நகை மற்றும் பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கோவை கருமத்தம்பட்டியிலும், மூதாட்டியை தாக்கி கொள்ளை அடித்த சம்பவம் நடைபெற்றது. தற்போது, ஆத்தூரில் மூதாட்டியை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை யடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்குள் தனியாக வசித்து வரும் வயதானவர்களை நோட்டமிட்டு, அவர்களை கொன்று, வீட்டில் கொள்ளைய டிக்கப்பட்டு வரும் முதியோர்களை அச்சற் திற்குள்ளாகியுள்ளது. மேலும், இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு அடையாளம் தெரியாத நகர்களை போலீசார் தேடி வரு கின்றனர்.