திருப்பூர், ஜூலை 2- திருப்பூர் மாவட்டத்தில் 28,552 குழந்தைகள் முன்பரு வக் கல்வி பயின்று வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர், தென்னம்பாளைம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பூம்புகார் குழந்தைகள் மையத் தில் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் திங்களன்று ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், திருப்பூர் மாவட் டத்தில் 1,303 முதன்மை மையங்கள், 169 குறுமையங்கள் என மொத்தம் 1,472 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வரு கின்றன. இதில், 2 வயது முதல் 6 வயது வரையிலான 28,552 குழந்தைகள் முன்பருவக் கல்வி பயின்று வருகின்றனர். சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைமேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டமாகும். இதன்மூலம் பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட் டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் பயனடை கின்றனர் என்றார். இந்த ஆய்வின்போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அபராஜிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.